கோவை, ஜூலை 4- இந்திய மாணவர் சங்க சிங்கை நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் கோவை சிங்கை நகர 5 ஆவது மாநாடு ஹோப்ஸ் அலுவலகத்தில் நடைபெற் றது. இதில் தலைவராக சந்துரு, செயலா ளராக அனிதா உள்ளிட்ட 35 பேர் கொண்ட சிங்கை நகரக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை மாவட்டத் துணைச் செயலாளர் கயல்விழி உள் ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அரசு பள்ளிகளில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண் டும். ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் பள்ளி, கல் லூரிகளில் நடைபெறும் கட்டண கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆவாரம்பாளையம் அரசு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.