சேலம், ஏப்.15- கள்ளக்குறிச்சி, சேலம் தொகுதி களில் போட்டியிடும் இந்தியா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியினர், விவசாயி கள் சங்கத்தினர் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர் இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு வாக்கு சேகரித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக சோளம்பள் ளம் புதுரோடு, அஸ்தம்பட்டி, சேலம் மேற்கு, வடக்கு மாநகரம், அரியாக்கவுண்டம்பட்டி, காளியம் மன் நகர், சலவையாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச் சாரம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. சந்திரன், பி.பாலகிருஷ்ணன், எம். சேது மாதவன், ஆர்.குழந்தை வேல், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியி டும் திமுக வேட்பாளர் மலையரச னுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டனர். ஆத்தூர் நகரம், விநாயகபுரம், நரசிங்கபுரம், ராம மூர்த்தி நகர், கல்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டனர். இதில் விவசா யிகள் சங்க வட்டத் தலைவர் இல. கலைமணி, மாவட்ட துணைத்தலை வர் பி.தங்கவேலு, மாவட்டப் பொரு ளாளர் வெங்கடாஜலம், வட்டத் துணைத்தலைவர் வி.சுப்ரமணி யன், துணைச்செயலாளர் கலிய மூர்த்தி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்ஆர்.சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.