கோவை, ஜூலை 20- காற்று வீசும் பருவமாக கருதப் படும் ஆடி மாதம் துவங்கிய நிலை யில், தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக் கும். இந்த ஆண்டு கடந்த ஜூலை 17 ஆம் தேதியன்று ஆடி மாதம் தொடங் கியது. ஆடி தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேக மாக வீசி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள காற்றா லைகளில் தற்போது மின்சார உற் பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லி யன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் காற்றாலை மின்சா ரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை போன்ற பகுதிகளில் காற் றாலைகள் அதிகம் உள்ளன. அங்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 நாட்க ளாக வானம் மேகமூட்டத்து டன் உள்ளது. இத னால் காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. இருந் தபோதிலும் நாட்கள் கடக்கையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம் பிக்கை தெரிவித்து உள்ளனர். இது குறித்து கோவையைச் சேர்ந்த இந் திய காற்றாலை மின் உற்பத்தியா ளர்கள் சங்கத்தின் தலை வர் கஸ்தூரி ரங்கன் கூறு கையில், காற்றின் வேகம் அதிகரித்துள் ளதால் மின் உற்பத்தி யின் அளவு உயர்ந்துள் ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு களாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சா ரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை அரசு போதிய அளவில் கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் போதிய அளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஆனால், அர சாங்கம் காற்றாலைகளை கண்டு கொள்வதில்லை. எனவே, ஒன்றிய, மாநில அர சுகள் காற்றாலைகள் மூலம் உற் பத்தி செய்யப்படும் மின்சாரத்தை போதிய அளவில் கொள்முதல் செய்ய வேண்டும். எங்களுக்கான சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், என்றனர்.