கோவை, ஏப்.21- சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். இந் நிலையில், கோவை விமான நிலை யத்தில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ஏப்ரல் 1 முதல் 19 ஆம் தேதி வரையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத் தியுள்ளது. மேலும், சர்வதேச விமான நிலையங்களில் கண் காணிப்பை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து விமான நிலையங் களில் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டது. இதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணி கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், 2 சதவிகித பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படு கிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1 முதல் 19 ஆம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் மேற் கொண்ட கொரோனா பரிசோத னையில் 9 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒருவருக்கோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருவ ருக்கோ தான் கொரோனா தொற்று இருந்து வந்தது. தற்போது வாரத் திற்கு 2 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இத னால், வெளிநாட்டு பயணிகள் தீவிர காண்காணிப்பிற்கு பின்பே வெளியே அனுமதிக்கப்படு கின்றனர். கோவை விமான நிலையத் திற்கு ஏப்ரல் 1 முதல் 19 ஆம் தேதி வரை 16 விமானங்களில் 2 ஆயிரத்து 127 பயணிகள் கோவை வந்துள் ளனர். இவர்களில், 180 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் கோவையை சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே. தவிர அரியலூர், மதுரை, நாமக்கல், நீலகிரியை சேர்ந்த தலா ஒருவருக்கும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவருக்கும், கேரளத்தை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பிற மாவட்டங்கள், மாநிலங் களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில நிர்வாகத் திற்கும் தகவல் தெரிவிக்கப்படு கிறது. கோவையை சேர்ந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படு கிறது. கோவையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடை வெளியை பின்பற்றல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறை களை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே தொற்று பாதிப்பு மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்றார். முன்னதாக, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலை யில், கோவை அரசு மருத்துவ மனையில் உள்ள ஊழியர்களுக்கு வெள்ளியன்று தடுப்பூசி செலுத் தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை, அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல்வர் நிர்மலா துவக்கி வைத்தார். இதில், ஏராளமான ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.