districts

img

ரேசன் கடை செயல்படும் நேரத்தை அதிகப்படுத்துக

உதகை, ஆக.27- ரேசன் கடை செயல்படும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  பொது விநியோக முறைகளை சீர்படுத்த வேண்டும். கோதுமை, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாதந் தோறும் ரேஷன் கடைகளில் வழங் குவதை முறைப்படுத்த வேண்டும். ரேஷன்  கடை செயல்படும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். மாதந்தோறும் மண்ணெய் வழங் குவதை உறுதிப்படுத்த வேண்டும். மண் ணெண்ணெய் வழங்குவதை அதிகபடுத்த வேண்டும். பண்டிகை காலங்களில் அத்தியா வசிய பொருட்களை மலிவு விலையில் வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம், உதகை மார்க்கெட் பகுதியில் செவ்வாயன்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு, பிரமிளா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர ஹாஜரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமிட்டி இடைச்செயலாளர் லில்லிமா, மாவட்டக் குழு  உறுப்பினர் தமிழ்மணி ஜீனத் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.