districts

img

பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வு மார்ச் 2 பேச்சுவார்த்தையில் சுமூகமாகத் தீர்வுகாண முடிவு

திருப்பூர், பிப்.23-  புதிய கூலி உயர்வு குறித்து வரும்  மார்.2 ஆம் தேதி சுமூகமாக பேசி  தீர்வு காண்பது என்று வியாழனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவானது. திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் செந்தில்குமார் முன் னிலையில் எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான பேச்சு வார்த்தை வியாழனன்று நடைபெற் றது. இந்த பேச்சு வார்த்தையில் எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் ஏற்கனவே கூறிய ஒரு ஆண்டிற்கு பழைய கூலி தான் வழங்க முடியும் என்ற நிலையில் இருந்து மாறுதல் ஏற்பட்டுள்ளது. புதிய கூலி உயர்வு குறித்து வரும் மார்.2 ஆம் தேதி அனுப்பர்பாளையத்தில் நிர்வாகத் தரப்பும், பாத்திரத் தொழிற்சங்க கூட்டு கமிட்டியும், சுமூகமாக பேசி தீர்வு காண்பது என்று முடிவானது. இதில் திருப்பூர் எவர் சில்வர் பாத் திர உற்பத்தியாளர்கள் சங்கம் சார் பாக தலைவர் துரைசாமி, மணி, மதி வானன், விஸ்வநாதன் உள்ளிட்ட நிர் வாகிகளும். சிஐடியு சார்பாக ரங்க ராஜ் மற்றும் ஆறுமுகம், காமாட்சி யம்மன் சங்கம் சார்பாக அர்ஜுனன், ஆறுமுகசாமி, எல்பிஎப் சார்பாக வேலுச்சாமி மற்றும் ரத்தினசாமி, ஏடிபி சார்பாக தேவராஜ், ஏஐடிசியு சார்பாக செல்வராஜ் மற்றும் நாக ராஜ், எச்எம்எஸ் சார்பாக திருஞா னம், ஐஎன்டியுசி சார்பாக வி.ஆர். ஈஸ்வரன், பாண்டியராஜ், பிஎம்எஸ்  சார்பாக ஸ்ரீனிவாசன் மற்றும்  லட்சுமி  நாராயணன் ஆகிய நிர்வாகிகள் பங் கேற்றனர்.