districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உடுமலை: நாளை மின்தடை

உடுமலை, நவ.10- திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகா, கிளுவன்காட்டூர்  துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் செவ்வா யன்று (நாளை) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி,  கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமர லிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்  போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்பநாய்க்க னூர், ஆலாம்பாளையம், சாமராயப்பட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளை யம், சாரதிபுரம், வீரசோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வா யன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: தனிப்படை அமைத்து அதிரடி சோதனை

கோவை, நவ.10- கோவையில் அதிகரிக்கும் போதைப் பொருட்கள் புழக் கத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறையினர் தனிப் படை அமைத்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். கோவை முழுவதும் கடந்த சில தினங்களாக கஞ்சா உள் ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சமூக விரோத செயல் களில் ஈடுபடும் நபர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனி யாக அறை எடுத்து தங்கி உள்ள இடங்களில் காவல் துறை யினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்து பயன்ப டுத்திய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வரு கின்றனர். இந்நிலையில், போத்தனூர் பகுதியில் போதை  மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது. அவர் கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்தி ரைகளை வாங்கி ரயில் மூலம் கோவைக்கு கொண்டு வந்து  கல்லூரி மாணவர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய் தது தெரியவந்தது. அதில் ஏழு பேரை கைது செய்து, ரூ.25 லட்சம் மதிப்பிலான 7,800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதே போன்று கடந்த சில நாட்களுக்கு  முன்பு வட மாநிலங்களான அசாம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து போன்ற பகுதிகளில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் முதல் தர கஞ்சா வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலையில் விற்பனை  செய்து வந்த கும்பல் சிக்கியது. இந்நிலையில், கோவை புறநகரப் பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக ஞாயிறன்று காவல்  துறையினருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 காவல் துணை  கண்காணிப்பாளர் மற்றும் 6 ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறை தனிப்படையினர் செட்டிபாளையம், மதுக்கரை,  கே.ஜி சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கி உள்ள  வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகளில் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

நாமக்கல், நவ.10- குமரபாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் திரிஷா. இவர் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே  உள்ள தனியார் கவரிங் நகை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் சனியன்று இரவு பணி முடிந்ததும், வீட்டிற்கு செல்ல புறப்பட்ட பொழுது, இவர் செல்ல வேண் டிய பேருந்து சென்று விட்டதால், கத்தேரி பகுதியைச் சேர்ந்த நண்பர் கோகுல் என்ப வரை இரண்டு சக்கர வாகனத்தின் மூலம்  சென்று பேருந்தில் ஏற உதவி செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பேரில் கோகுல் திரி ஷாவை தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற அரசு பேருந்தினை முந்த முயற்சி செய்துள்ளார். அப்பொழுது குறுகலான சாலையில் பேருந் தினை முந்தி செல்ல முடியாத சூழ்நிலை யில், நிலைத்தடுமாறி வாகனம் சரிந்து  விழுந்தது. இதில் பேருந்தில் பின் சக்கரமா னது, திரிஷா மீது ஏறி இறங்கியது. இதில்  பலத்த காயமடைந்த திரிஷாவை, அருகிலி ருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திரிஷா சிகிச்சை உயிரிழந்தார். கோகுல் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி

முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி கோவை, நவ.10- மாவட்ட காவல்துறையும், பி.எஸ்.ஜி மருத்துவமனையும் இணைந்து காவலர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது சம்பந்தமான பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட காவல்துறையும், பி.எஸ்.ஜி மருத்துவ மனையும் இணைந்து மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து  காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது சம்பந்தமான கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் சனியன்று பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன் துவங்கி வைத்தார். இப்பபயிற்சியின் முக்கிய  நோக்கமானது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்பதற்காகப் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவ லர்கள், ரோந்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடி  தொடர்பில் இருக்கும் காவலர்கள் உடனே விபத்து ஏற்பட்ட  இடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில், விபத்து  ஏற்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும் வரை காத் திருக்காமல், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், முதுகு தண்டுவடத்தில் காயம்  அடைந்தவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றுவது குறித்தும், மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிப்பது குறித்தும் அனைத்து காவலர்களும் அறிந்து  கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், மாவட்டத்தில் பணி புரியும் அனைத்து காவலர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இப்பயிற்சி அளிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர்  மீது வழக்குப்பதிவு

கோவை நவ.10- பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்  பேசிய இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் ஒம்கார்  பாலாஜி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர். கோவை ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்தி களை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து,  கடந்த அக்.27 ஆம் தேதியன்று கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர்  அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், அவரது மகனும் இளைஞரணித் தலைவருமான ஓம் கார் பாலாஜியும் கலந்து கொண்டார். அப்போது, நக்கீரன் ஆசி ரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுக்க வேண்டும்  எனவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார். இதுதொடர்பாக பந் தயசாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது இரு பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த னர். இந்நிலையில், வருகின்ற நவ.13 ஆம் தேதியன்று ஓம்கார்  பாலாஜியை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என  நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல் அதிகாரியை தாக்க முயற்சி

சேலம், நவ.10- சேலம் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வா ளரை கைதி ஒருவர் தாக்க முயன்றதால், அப்பகுதியில் பரப ரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மல்லூர் காவல்துறையினர் கடந்த 2020  ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நரேஷ்குமார் (32)  என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்த னர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக் காக மாவட்ட ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராமானு ஜம் மற்றும் இரண்டு காவல்துறையினர் நரேஷ்குமாரை நீதி மன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்பொழுது மகளிர் நீதி மன்ற வரண்டாவில் காத்திருந்த நரேஷ்குமார் போலீசாரி டம் பீடி, சிகரெட் மற்றும் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு “பீடி, சிகரெட் தர முடியாது. சாப்பாடு சிறையில் உனக்கு தயாராக  இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திர மடைந்த நரேஷ்குமார் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க  பாய்ந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் நரேஷ்குமாரை  தடுத்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை

நாமக்கல், நவ.10- உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. இதுதொடபாக நாமக்கல் வேளாண் இணை இயக்குநர்  (பொ) எஸ்.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 5,969 ஹெக்டேர் நெல் பயிர், 64,926  ஹெக்டேர் சிறுதானியப் பயிர்கள், 9,663 ஹெக்டேர் பயறு வகை பயிர்கள், 1,598 ஹெக்டேர் பருத்தி பயிர், 7,798 ஹெக் டேர் கரும்பு பயிர் மற்றும் 27,849 ஹெக்டேர் எண்ணெய் வித்துப் பயிர் என மொத்தம் 1,17,803 ஹெக்டேர் பரப்பள வில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. உர இருப்பில் யூரியா 2,394 மெட்ரிக் டன், டிஏபி 1,497 மெட்ரிக் டன், பொட் டாஷ் 1,230 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,725 மெட்ரிக்  டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 388 மெட்ரிக் டன் என்ற  அளவில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக விற்கப்படு கின்றன. உர விநியோகம் மற்றும் இருப்பினை கண்காணிக்க  நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான நிலையான கண் காணிப்புக் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்ற னர். மேலும், உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. மீறினால் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஏபி வாய்க்காலை குப்பைத் தொட்டியாக மாற்றும் மாவட்ட நிர்வாகம்

திருப்பூர், நவ.10- பிஏபி. வாய்க்காலைக் குப்பைத்  தொட்டியாக மாவட்ட நிர்வாகம் மாற் றுகிறது என, பிஏபி வெள்ளக்கோ வில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு  சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பிஏபி கிளை கால்வாயின் 27 கிமீ நீளமுள்ள காங் கயம் - வெள்ளக்கோவில் வழித்தடத் தையும், பொங்கலூரில் உள்ள  சில பகுதிகளையும் ஆய்வு செய்தது.  இதன்பிறகு கரையோரங்களிலும் கால்வாயின் உள்ளேயும் கொட்டப்ப டும் கழிவுகள் இயற்கையான நீரின் போக்கை தடுத்து நிறுத்துகின்றன என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது. மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் பிஏபி  வெள்ளக்கோவில் கிளை கால்வா யில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிக ளின் பகுப்பாய்வு, கால்வாயின் நீரின்  தரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கி யத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிய  வந்தது. விவசாயிகள் தாங்களாக முன்வந்து, சுமார் ரூ.15 லட்சம் செல வில், குப்பைகள் கால்வாய்க்குள் விழாதபடி கம்பி வேலி அமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்த முன்  வந்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகம்  ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால்,  இதுவரை பொங்கலூர் ஊராட்சி இதை கிடப்பில் போட்டு பிஏபி வாய்க் காலை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வ தில்லை. காங்கேயம் அருகே கண்ணபுரத் தில் உள்ள பிஏபி பகிர்மானக் கால் வாயில் உள்ள குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவது அரசுத் துறைக ளுக்கு இடையேயான ஒருங் கிணைப்பு இல்லாததற்குச் சான்றா கும். இதனால் பல்லாயிரம் விவசாயி கள் சொல்ல முடியாத துயரத்தை  எதிர்கொள்வது தொடர் கதை ஆகி றது என, பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

திருப்பூர், நவ.10- திருப்பூரில் ஞாயிறன்று வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர். திருப்பூர் - தாராபுரம் சாலை, பலவஞ்சி பாளையம் பிரிவில் திமுகவின் கலைஞர் அறி வாலயம் உள்ளது. இதனருகில் உள்ள குடியி ருப்பில் ஞாயிறன்று அதிகாலை ஒரு வெறி  நாய் சாலையில் நடந்து சென்றவர்களை திடீ ரென்று கடிக்கத் தொடங்கியது. அப்பகுதி யில் சென்ற பெண்கள் உட்பட 10க்கும் மேற் பட்டோரை அந்த நாய் கடித்துக் குதறியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு  மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையில் சேர்ந்தனர். சாலையில் சென்ற பொதுமக் களை கடித்த அந்த வெறிநாயை பிடிக்க மாந கராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.  திருப்பூர் நகரில் தெருநாய் நடமாட்டத்தை கட் டுப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனி னும் வெறிநாய் கடி பிரச்சனை தொடர்ந்து வரு கிறது.