கோவை, மே. 27- கொளுத்தி தள்ளும் கோடை வெயிலில் மனிதர்களே, வெந்து வேக்காடாகும் நிலையில், பண் ணையில் வளர்க்கப்படும் கறிக் கோழிகள் வெயிலின் தாக்கத்தால் உணவு உட்கொள்ளாமல் இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணை களும், திருப்பூரில் 4 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல் பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட் டத்தில் இருந்து மட்டும் கேரளா விற்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 2 கோடி கிலோ கறிக்கோழிகள் அனுப்பபடுகின்றன. இதேபோன்று கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் அனுப்படுகின்றன. தமிழ்நாட்டில் நாள்தோறும் 10 லட்சம் கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டின் கறிக்கோழிகள் உற்பத்தியில் 75 சதவிகிதம் பங்கு வகிக்கின்றனர். தினமும் 5 லட்சம் கோழிகள் தமிழ் நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் விற்பனையாகு கின்றன. இத்துறையில் நேரடியா கவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக கோழிகளின் இறப்பு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தியும் குறைந்துள்ளது. இதுகுறித்து உடுமலைப் பேட்டை கறிக்கோழி பண்ணை உரிமையாளர் மகாதேவன் கூறு கையில், தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், கோழிகள் இறப்பு சதவிகிதம் அதிக ரித்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக கோழிகள் இந்த வெப் பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓய்ந்து போய்விடுகிறது. குறிப் பாக, கறிக்கோழிகள் தீவனங் களை நன்றாக சாப்பிட வேண்டும்.
அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் எடை அதிகரிக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆகவே தான் பண்ணைகளில் இரவு நேரங்களில் எப்எம் ரேடி யோக்களை அலறவிட்டு, கோழி களை விழித்தே இருக்க செய் வோம். ஆனால், இப்போது கோடை வெயில் கொளுத்தி போடு வதால், தீவனங்களை உண்ண மறுக்கும் கோழிகள் சோர்ந்து அமர்ந்து விடுகிறது. நடமாட்டம் இல்லையென்றாலே கறிக்கோழி களின் ஆயுசு அவ்வளவுதான். இதன் காரணமாகவே கோழிகள் இறந்து விடுகிறது என்றார். மேலும், குளிர்காலத்தில் கறிக் கோழி வளர்ப்பில் தினமும் 2 முதல் 3 சதவிகிதம் கோழிகள் இறப்பு ஏற்படும். தற்போது வெயில் காலத் தில் 10 முதல் 12 சதவிகிதம் வரை இறப்பு ஏற்படுகிறது. மேலும், வெயில் அதிகம் உள்ளதால், விற்பனையிலும் சரிவு ஏற்பட் டுள்ளது. சுமார் 40 சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரண மாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 சதவிகிதம் உற்பத்தி குறைக்கப் பட்டுள்ளது. இதனால், கறிக்கோழி விலையும் அதிகரித்துள்ளது. தற் போது பண்ணை விலை கிலோ விற்கு ரூ.105 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட் டத்தில் மட்டும் ஒரு வாரத்திற்கு 50 லட்சம் கிலோ விற்பனை ஆகும். தற்போது 40 லட்சமாக குறைந் துள்ளது என்றார்.