சேலம், மே 4- கோடைகால சீசனையொட்டி, சேலம் சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதென வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட் டாத்துப்பட்டி, வரகம்பாடி, அயோத்தி யாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண் டாபுரம், எடப்பாடி மற்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் மாம்பழங்கள் சேலம் சந் தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மாம்பழங்களை வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல் கின்றனர். ஆன்லைன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. வழக்கமாக மார்ச் 2 ஆவது வாரத்தில் தொடங்கும் சீசன், இந் தாண்டு பருவம் தவறி பெய்த மழை யால், மாம்பழ உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. இதனால் தற்போது தான் மீண்டும் மாம்பழ வரத்து தொடங்கியுள் ளது. குறிப்பாக, சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரா உள் ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்துள் ளன. சேலம் மார்க்கெட் பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 25 டன் அளவுக்கு மாம் பழங்கள் வரத்து உள்ளன. இதனால் மாநகரப் பகுதிகளில் மாம்பழ விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. மாம்பழங்கள் தற்போது கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர் வரத்து அதி கரிப்பால், மாம்பழங்கள் விலை வரும் நாள்களில் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், சேலம் சந் தைகளில் கடந்தாண்டு இதே காலகட் டத்தில், 40 முதல் 50 டன் வரை மாம் பழங்கள் வரத்து இருந்தன. ஆனால், இந்தாண்டு 25 டன்னாக உள்ளது. தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலான மாம ரங்களில் பூக்கள் உதிர்ந்துள்ளது. இத னால் மாம்பழங்கள் வரத்து வழக் கத்தை விட குறைந்துள்ளன. எனினும் வரும் நாட்களில் மாம்பழங்களின் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த னர்.