districts

img

அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் துவக்கம்

கோவை, நவ.29- கோவை, நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் துவங்கப் பட்டுள்ள வானவில் மன்றத்தால் ஏராளமான மாணவர்கள் பய னடைய உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவதற் காக புதிய முயற்சியாக வானவில் மன்றம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களிடையே உள்ள அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்த சிந்தனையை, உருவாக்கும் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத் திற்காக எஸ்.டி.இ.எம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம்) திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த  திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்த  திட்டத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து  செய்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டுவார்கள். இதற்காக, ஒரு பள்ளிக்கு ரூ.1,200 நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, கோவை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 171 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. இதில், மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 89 பேர் பயனடைய உள்ளனர். இதன் தொடக்க விழாவையொட்டி அனைத்து அரசு, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் எளிய பரிசோதனைகளை மேற்கொண்டனர். சில மாணவர்கள் தங்க ளின் படைப்புகளை காட்சிப்படுத்தினர். நீலகிரி இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நேற்று முன்தினம் வானவில் மன்றம் தொடங்கப் பட்டது. அப்போது மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது. இந்நிலையில், உதகை அருகே உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் வான வில் மன்றம் தொடங்கப்பட்டது. விழாவையொட்டி 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வானில் பலூன் பறக்க விட்டனர். இதன்பின் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.