உதகை, மார்ச் 19- பிக்கைகண்டி அரசுப்பள்ளியில் நவீன வகுப்பறை தொடங்கப்பட்டு உள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை, சோலூரை அடுத்த பிக்கைகண்டி பகு தியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி ஆண்டு விழா சனியன்று, ஊர் தலைவர் ஆலன் தலைமையில் நடை பெற்றது. உதவி தலைமை ஆசிரியை கிளாரி வரவேற்றார். தலைமையாசி ரியர் ஆலன் பள்ளியின் ஆண்டறிக் கையை வாசித்தார். மேலும், ஆண்டு விழாவையொட்டி இப்பள்ளியில் பள் ளியில் நவீன வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறு கையில், அரசு பள்ளிகளில் படித்து பலரும் தற்போது ஒன்றிய, மாநில அரசு பணிகளில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியின் முன்னேற்றத்திற்கு மாநில அரசு பல் வேறு திட்டங்களை வகுத்து செயல்ப டுத்தி வருகிறது. இவற்றை பயன்ப டுத்தி மாணவர்கள் சிறப்பான எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நமது பள்ளியில் நவீன வகுப்பறை தொடங்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொள் ளலாம், என்றார். இதைத்தொடர்ந்து மாணவர்க ளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் பல் வேறு வண்ண உடைகளில் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினர். முடி வில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார கல்வி அலுவலர் நந்தினி, சோலூர் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நவீன வகுப் பறை தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மாணவ, மாண விகள் தெரிவித்தனர்.