districts

img

வாசன் கண் மருத்துவமனையில் லேசிக் மெஷின் திறப்பு விழா

சேலம், டிச.10- சேலத்தில் முதல்முறையாக வாசன் கண் மருத்துவமனை யில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய லேசிக் ரின் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருத்தினர்களாக சேலம் மாநகராட்சி மேயர்  இராமச்சந்திரன். விநாயகா மிஷன் எழில்வேந்தன் இரட்டை கிளி அரிசி நிறுவனர் உதயகுமார் ஆகியோர் கலந்து  கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்விற்கு, வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குநர் மருத்துவர் கமல்பாபு, சேலம்  தலைமை மருத்துவர் செல்வகுமாரி தலைமை ஏற்றனர். இதில், வாசன் கண் மருத்துவமனையின் மண்டல செயல்  இயக்குநர் சுந்தரமுருகேசன், பானுபிரதாப் சிங், வெங்க டேஷ் மற்றும் மண்டல மேலாளர்பன்னீர்செல்வம், முத்த  பொது மேலாளர் தமிழ்செல்வன், கோவை மண்டல வணிக  மேலாளர் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் கலந்து  கொண்டனர்.