districts

தமிழகம், ஆந்திராவில் பானி புயல் கரையைக் கடக்காது

சென்னை, ஏப்.29-தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள பானி புயல் திங்கட்கிழமை காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இது செவ்வாயன்று அதிதீவிரப் புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடமேற்கு திசையை நோக்கிநகரும் அதிதீவிர பானி புயல், மே 1-ஆம்தேதிக்குப் பின் தனது பாதையை மாற்றிவடகிழக்கு திசையை நோக்கிப் பயணிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.பானி புயல் தமிழகம், ஆந்திராவில் கரையைக் கடக்காது எனத் தெரிவித் துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்ஒடிசாவில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:-பானி புயல் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 870 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. பானி புயல் செவ்வாயன்று அதிதீவிரப் புயலாக மாறும். இதனால் ஏப்.30மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.

;