districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.11- இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓமலூரில் மாற் றுத்திறனாளிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாற்றுத்திறனாளிக ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையை பிஎச்எச் அல்லது ஏஏஒய் ஆக மாற்றி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகையை, விண்ணப்பித்த 15 நாட்களுக் குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஓம லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட் டச் செயலாளர் எம்.குணசேகரன், மாவட்டத் துணைச்செயலாளர் ஆர்.அமலாராணி உட் பட திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.