அவிநாசி, பிப்.4- அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை பொதுமக்கள் வெள்ளியன்று சிறைப்பிடித்தனர். அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயம்பாளையம் பகுதி யில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் தூர்நாற்றம் வீசக்கூ டிய கழிவுகளை டிராக்டர் மூலம் அப்பகுதி மயானத்திற்கு அருகே உள்ள குட்டையில், கொட்ட வந்தனர். இதைப் பார்த்த நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக் கள் வாகனத்தை சிறைப்பிடித்து டிராக்டர் ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் நிறுவனத்தார் வரா ததால், வாகனம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.