districts

தைப்பூசத்திற்கு பழனிக்கு சிறப்பு ரயிலை உடனடியாக இயக்கிடுக ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்

கோவை, ஜன. 22 –  தைப்பூசத் திருவிழாவிற்கு பழ னிக்கு சிறப்பு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். சேலம் கோட்ட ரயில்வே மேலா ளருக்கு, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழு தியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்ப தாவது, ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் ரயில் பயணத்தை நம்பியே உள்ளனர். இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று அச்சத் தின் காரணமாக ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.   இந்நிலையில், குறைந்த கட் டணத்தில் இயங்கும் பயணிகள் ரயில்களை இயக்கிட உடனடியாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இதேபோல், தமிழகத்தில் தைப்பூச விழா விமர் சையாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முருக பக்தர்கள் பெரும்பாலானோர் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஆகவே கோவை முதல் பழனிக்கு தைப்பூசத் தையொட்டி சிறப்பு ரயிலை இயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், ஏற்கனவே தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள பல்வேறு பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க உடனடியாக நடவ டிக்கை எடுத்து ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, உழைப்பாளி மக்க ளின் பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என அக்கடித்த்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரிவித் துள்ளார்.

;