districts

சட்டவிரோத மது விற்பனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலீசில் புகார்

உடுமலை, மார்ச் 3- உடுமலை பகுதியில் அதி காலையிலேயே சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்ப னையை தடுக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் காவல் நிலையத்தில்  புகாரளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை  மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் அதிகாலையிலேயே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வரு கிறது. இதனால் ஏராளமான குடும் பங்கள் அழிந்து கொண்டிருக்கின் றன. மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில், உடுமலை மற்றும் அமராவதி காவல் நிலை யங்களில் புகார் மனு அளிக்கப்பட் டது. அம்மனுவில், உடுமலை மற் றும் ஒன்றியத்தின் கிராம பகுதியான குரல்குட்டை, முருக்கத்திபள்ளம், ஆலாம்பாளையம்பிரிவு, கண்ணம நாயக்கனூர், மலையாண்டிகவுண் டனூர் நால்ரோடு, ஆண்டியகவுண் டனூர், எலையமுத்தூர், கல்லா புரம், பூளவாடிபுதுநகர், கோபால புரம், ஜல்லிபட்டி, தளி பேரூராட்சி  பகுதி, பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, எரிசினம்பட்டி, பூலாங்கிணறு உள்ளிட்ட ஊராட்சிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடை பெறுகிறது. மேலும், மக்கள் கூடு கிற பொது இடங்கள், பேருந்து  நிறுத்தங்கள், பள்ளி, அங்கன்வாடி,  கோவில் வளாகங்கள், வாய்க்கால் மேடுகள், சுடுகாடு என அனைத்து  இடங்களிலும் அமர்ந்து மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து பாதையிலே வீசிவிட்டு செல்வது  மக்களுக்கு பாதிப்புகளை ஏற்ப டுத்துவதோடு மட்டுமன்றி, சுற்றுச் சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது. மாலை நேரங்களில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத அள விற்கு குடித்துவிட்டு ஆபாசமாக வும், அசிங்கமாகவும் கெட்ட வார்த் தைகளால் பேசி, சண்டைகளில் பலர் ஈடுபடுகின்றனர். மேலும், உடு மலை ஒன்றியத்தின் பல்வேறு பகுதி களில் அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை, சீட்டாட்டம் போன் றவை நடைபெற்று வருகின்றன. எனவே, தமிழக அரசும், காவல்  துறையும் காலை நேரத்தில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது பானம் விற்பனை செய்வதை தடுக் கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் இரவு நேரத்தில் ரோந்து செல்வதையும், பொதுமக்களுக்கு பிரச்சனைக் குரிய குறிப்பிட்ட பகுதிகளில் கூடு தல் கண்காணிப்பு செய்திடும் வகை யில், கண்காணிப்பு கேமாரக்களை பொருத்த ஏற்பாடு செய்ய வேண் டும். பொதுமக்களிடம் போதை ஒழிப் புப் பிரச்சாரங்களை நடத்திட ஒதுக் கப்படுகிற நிதியை முழுமையாக பயன்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.