கோவை, அக். 23 - கோவை, மேட்டுப்பா ளையத்தையடுத்துள்ள தோலம்பாளையம், மேல் பாவி, செங்குட்டை, பட்டி சாலை,ஆலங்கண்டிபுதூர் உள்ளிட்ட மலையடிவார கிராம பகுதிகளில் சிலர் தீபா வளி பண்டிகையை ஒட்டி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய சேவல், இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தோலம்பாளையம் ஆலங்கண்டிபுதூர் பகுதியில் கொடுங்கரை பள்ளத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதை கண்டுபிடித் தனர். இதையடுத்து போலீசார் அங்கு சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆலங் கண்டிபுதூர் ஜெயக்குமார் (43), கோவை ராக்கிபாளையம் சித்ரா நகர் பகுதி சேர்ந்த ரவி (48), துடியலூர் நேரு நகரை சேர்ந்த மகேந் திரன் (36) வினித் (29), கோவையை சேர்ந்த கணேஷ்குமார் (27), கேரள மாநிலம் பாலக் காடு மடக்காடு வட்டலக்கி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (46), காளியப்பன் (30), மேல் கோட்டத்துறை பகுதியை சேர்ந்த மாரி முத்து (64), மன்னார்புரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் (28), அகழி பகுதியை சேர்ந்த சிவகுமார், பெரியநாயக்கன் பாளையம் வெள்ளமடை பகுதி யை சேர்ந்த நட்ராஜ் (45), கோவை வட வள்ளியை சேர்ந்த கௌதம் (21), காரமடை சின்னகண்டியூரை சேர்ந்த அருள்குமார் (34), சீலீயூரை சேர்ந்த கார்த்தி (24) என மொத்தம் 15 பேரை போலீசார் பிடித்தனர். அப்போது இவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்து அவர்களை தாக்க முயற்சி மேற் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர் களிடம் இருந்து 18 சேவல், 11 இருசக்கர வாகனம் ஒரு கார் மற்றும் 36,780 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.