districts

img

சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்: சிபிஎம் அறிவிப்பு

அவிநாசி, ஜூலை 5- அவிநாசி அருகே உமையஞ்செட்டிபா ளையம் பகுதியில் தார்ச்சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுத்து  சாலை சீரமைக்கப்படவில்லை என்றால் பொதுமக்களைத் திரட்டி மறியல் போராட்டம்  நடத்துவோம் எனக் கூறியுள்ளனர்.   திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,  மங்கலம் சாலை பிரிவில் இருந்து, அம்மாபா ளையம் எம்ஜிஆர் நகர் வரை, குடிதண்ணீர்  குழாய் பதிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டி குழாய் கள் பதிக்கும் வேலை நடைபெற்று முடிந் துள்ளது. மேலும் தார் சாலையில் பள்ளம் தோண்டிய காரணமாகச் சாலைகள் சிதலம டைந்து, போக்குவரத்திற்கு மிகவும் பாதிப்பு  ஏற்பட்டு விபத்துகள்  நேர்கிறது. இதனைச் சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவிநாசி வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் மற்றும் பூண்டி நகராட்சியிடம்  தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வந்தனர். இதன்மீது எந்தவித நடவடிக்கையும் இல் லாத காரணமாக 2021 நவம்பர் 12ஆம் தேதி  உமையஞ் செட்டிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்களும் பூண்டி நக ராட்சி எல்லை உமையஞ் செட்டிபாளையம் பகுதியில் சாலையில் வாழைமரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

.  இதனை அறிந்த  வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலை வர் சாந்தி வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்களிடம், தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டிருக்கிறது, குடிநீர் பைப்  இன்னைக்கும் பணிகள் இரண்டு இடங்களில்  நடை பெறாமல் உள்ளது, இந்த இணைப்பு நடைபெற்றவுடன்,  விரைவில் சாலை சீர மைத்துத் தரப்படும் என உறுதி அளித்த தைத் தொடர்ந்து பொதுமக்களும் கட்சியின ரும் கலைந்து சென்றனர். ஆனால், இதுவரை சாலை சீரமைக்கப் படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட் டார வளர்ச்சி அலுவலர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம்  கோரிக்கை மனு அளித்து விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் சாலை மறியல் போராட் டம் நடைபெறும் என கூறியுள்ளனர். இம்மனு வைப் பெற்றுக் கொண்டு விரைவில்  கோரிக்கை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். முன்னதாக இம்மனுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி, நகர மன்ற உறுப்பினர் தேவராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், முன் னாள் கிளைச் செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ரத்தினம், கிளைச்செயலாளர் வையா புரி ஆகியோர் அளித்தனர்.