districts

img

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? நூல் வெளியீட்டு விழா

கோவை, ஏப்.17- ப.திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமி ழர்? என்ற நூல் வெளியீட்டு விழா சனி யன்று கோவை மாநகராட்சி கலை யரங்கில் நடைபெற்றது.  கோவை மாநகராட்சி கலையரங் கில் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமி ழர்?’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமையேற்று திராவிட முன் னேற்ற கழக துணைப் பொதுச்செய லாளர் ஆ.இராசா எம்.பி., சிறப்புரை யாற்றினார். வழக்கறிஞர் சென்னி யப்பன் வரவேற்புரையாற்றினார். திரைக்கலைஞர் சத்யராஜ், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், புலவர் செந்தலை கவுதமன், எழுத் தாளர் பாமரன் உள்ளிட்டோர் சிறப் புரையாற்றினர். வழக்கறிஞர் கி. சிவக்குமார் தொகுப்புரை வழங்கி னார்.

மூட நம்பிக்கைகள் அழுத்தமே தரும்

இந்நிகழ்ச்சியில் திரைக்கலை ஞர் சத்யராஜ் பேசுகையில், தமிழ் சமுதாயத்திற்காக உழைத்தவர் யாராக இருந்தால் என்ன? அவரது  தாய்மொழி குறித்து எனக்கு கவலை இல்லை. 21 மொழிகளில் பெரியா ரின் புத்தகத்தை மொழி பெயர்த் துள்ளார் தமிழக முதல்வர். பிற நாட்டு மொழியில் இந்த புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டால், ஒவ் வொருவரும் பெரியாரை அவரது மொழிக்கு உரியவராக கொண்டாடு வார்கள். ஏனென்றால், அவர் மனித குல வளர்ச்சிக்கு பாடுபட்டார். தமிழ கத்தில் வாழ்ந்ததால் தமிழர்களுக்கு பெரிதும் பயன்பட்டது. பணக்கார ராக இருந்தும் மனிதம் என்ற நோக் கில், மனிதர் மீது அக்கறை கொண்ட வர் பெரியார். ஆங்கிலத்தை அரவ ணைத்துக் கொள்ளாவிட்டால் இந்தி  உள்ளே வந்துவிடும். தேவையில் லாத சாஸ்திர, சம்பிரதாயங்கள்,  மறைமுகமாக உள்ள பண்பாடு கலாச் சாரங்கள் உங்கள் மன அழுத்தங் களை அதிகரிக்கின்றன. இன்று இருக் கும் வேலைப்பளுவை தாண்டி, மூட நம்பிக்கைகள் இருந்தால் அது உங்களுக்கு மேலும் அழுத்தம், என் றார்.

சாதி என்பது ஒரு விபத்து

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச் சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், ரஷ்ய புரட்சி, பிரஞ்சு புரட்சிக்கு காரணமானவர் களை விட நீங்கள் முக்கியமானவர் என்று அறிஞர் அண்ணா, பெரியா ரிடம் தெரிவித்தார். சிந்தனையாளர் களுக்கும், தத்துவவாதிகளுக்கும் மொழி இல்லை. எனவே, பெரியா ருக்கும் மொழி இல்லை என்பதை சத்யராஜ் தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார். சாதி ஒரு விபத்து ரீதிகாக நமக்குள் வந்தது. பொருள் நமக்கு வந்த கட்டுமானம். அதே போல் மொழியும் ஒரு கட்டுமானம் தான். இந்த கட்டுமானங்களை தவிர்த்துவிட்டு வாழ்ந்தவர் பெரி யார். இன்று உள்ள எந்த கடவுளும்  இந்து கடவுள் அல்ல. இந்துமயமாக் கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெரி யாரை இவர்கள் எதிர்க்கிறார்கள், என்றார்.