திருப்பூர், பிப்.21- திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங் கிய அதிகாரிகள் அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை களை விளக்கி கூறினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண் ணிக்கை செவ்வாயன்று நடைபெறுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கான வாக்கு எண் ணிக்கை சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெறு கிறது. இங்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணியாற்ற உள்ள முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி திருப் பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்களன்று நடைபெற் றது. இதில் அதிகாரிகள், முகவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கினர்.