districts

img

ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்திடுக

நாமக்கல், ஜுன் 18- ஏரியில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை  தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.  நாமக்கல்லில் இருந்து வரும் சாக்கடை  கழிவு நீர் சுமார்  10 கிலோமீட்டர் தூரம் பய ணித்து வீசானம், வேட்டாம்பாடி, சிவியாம் பாளையம், லக்கமநாயக்கன்பட்டி, சாலப் பாளையம் வழியாக தூசூர் ஏரியை வந்த டைகிறது. இதனால், இந்த சாக்கடை வரு கின்ற வழிகளில் உள்ள கிணறுகள், போர் வெல், சிறிய குட்டைகள் போன்றவை விவ சாயத்திற்கும், கால்நடைகளுக்கும் பயன் படாத நச்சு கலந்த நீராக மாறுகிறது.  தூசூர் ஏரி, கொல்லிமலையின் மேற்கு பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரைக் கொண்டு  பெரிய அளவு நீர் தேங்கக்கூடிய ஏரியாகும். கொல்லிமலை அடிவாரத்திலிருந்து காளப்ப நாயக்கன்பட்டி, முத்துக்காப்பட்டி, பழைய பாளையம் வழியாக வரக்கூடிய அந்த ஏரி களில் நிரம்பி வரக்கூடிய மழை நீர் தூசூர் ஏரி யில் சேமித்து ஆயிரக்கணக்கான ஏக்கர்  பாசனம் அடையக்கூடிய மாவட்டத்தினு டைய முதன்மையான பெரிய ஏரி ஆகும். இதன் வடிகால் நீர் அடுத்துள்ள பாலப்பட்டி வரையிலும் சென்று காவிரி ஆற்றில் கலக் கிறது. கடந்த சில வருடங்களாக நாமக்கல் லின் ஒட்டுமொத்தமான பாதாள சாக்கடை யினுடைய கழிவுநீர், பட்டறை கழிவு நீர் ஆகி யவை தூசூர் ஏரியில் கலக்க விடப்படு கிறது. 

இதன் காரணமாக, இந்த சுற்று வட்டாரம் முழுவதும், ஏரியினுடைய மேல் பகுதியிலும், ஏரியினுடைய கீழ் பகுதியில் இருந்து காவிரி ஆற்றின் வரையிலும் இருக்கக்கூடிய வடி கால் பகுதியிலும் குடிநீர் மற்றும் விவசாயம் போன்றவை செய்ய முடியாத சூழல் ஏற்பட் டுள்ளது. ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசக் கூடிய பகுதியாகவும், தண்ணீரில் காலை  வைக்க முடியாத அளவுக்கான விஷத்தன்மை கொண்டதாகவும் மாறி வருகிறது. ஆகவே, இந்த சுற்றுவட்டார பகுதியில் பல்லாயிரக் கணக்கான மக்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிலமும், நீரும் மாசுபடக் கூடிய  சூழல் உள்ளது. இதனால், பாசன பரப்பு முழுவதும் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து  மாவட்ட நிர்வாகத்தின் கவவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும் எவ்வித நடவ டிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.   இதனையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்க மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் திட்டமிட்டது. இதன் ஒருபகுதியாக தூசூரில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட உதவி செயலாளர் வி.சதா சிவம் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற் றார். இதில், எருமப்பட்டி முன்னாள் பெருந் தலைவர் ஜெகதீசன், தூசூர் ஊராட்சி மன்ற  தலைவர் சுகுணா, தமிழ்செல்வன், தூசூர் ஒன்றிய கவுன்சிலர் மகாமுனி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்  ஏ.  ஆதிநாராயணன்,  மாவட்ட செயலாளர் பி.  பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் என். ஜோதி,ஒன்றிய தலைவர்  மூ.து.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் இ.எம்.ராஜேந்திரன் மற் றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் பங் கேற்று கோரிக்கைகள் குறித்து உரையாற்றி னர்.