நீண்ட ஆண்டுகளாக பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.