districts

img

“நாடும், நாமும்” சிறப்பு கருத்தரங்கம்

நாமக்கல், மார்ச் 9- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடை பெற்ற, “நாடும், நாமும்” சிறப்பு கருத்தரங்கில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நாமக்கல் உழவர் சந்தை அருகே உள்ள கவின் கிஷோர் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், “நாடும்,  நாமும்” என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சங் கத்தின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குப்புசாமி வரவேற்றார். மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய் வூதியர் சங்கங்களில் ஒருங்கிணைப்பு மாவட்டத் தலை வர் பி.கே.ராமசாமி துவக்க உரையாற்றினார். அகில இந்திய பிஎஸ்என்எல் மற்றும் டிஓடி ஓய்வூதியர் சங்க நிர்வாகி எஸ்.அழகிரிசாமி வாழ்த்துரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் நெல்லை எஸ். ஆறுமுகம், மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்க மண்டலச் செயலாளர் எம்.காளியப்பன் ஆகியோர் சிறப்புரையாற் றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.