districts

img

உதகையில் பெய்த கனமழை

உதகை, ஆக.10- உதகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவ தால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இத னிடையே, உதகை கோத்தகிரி சாலையில் மடித் தொரை பகுதி யில் பாறை விழுந்து சாலையில் விரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. 2 மணி நேரத்திற் கும் மேலாக பெய்து வரும் கனமழையினால் உதகை பேருந்து நிலையம், சேரிங்கிராஸ், படகு இல்லம் செல்லும் சாலை களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொது  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. மேலும், கோத்த கிரி - உதகை செல்லும் நெடுஞ்சாலையில் மடித்தொரை கிரா மம் அருகே பாறைகள் சாலையில் விழுந்தால் சாலையில் விரி சல் ஏற்பட்டது. உடனே நெடுஞ்சாலை துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத் திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையில் ஏற்பட் டுள்ள விரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். விரிசல் ஏற்பட்டு உள்ள சாலையை ஜேசிபி இயந்திரத்தின் உதவியு டன் கற்கள், தார்க்கலவைகள் கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.