நாமக்கல், ஏப்.21- சிஐடியு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் கிளை கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். நாமக்கல் மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர் சங் கத்தின், திருச்செங்கோடு லாரி பார்டர் சங்க கிளை மகாசபை கூட்டமானது சிஐடியு தொழிற்சங்க அலுவல கத்தில் சங்கத் தலைவர் ராஜு தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், 50 கிலோ எடையுள்ள மூட்டை களை அனுமதிக்க வேண்டும். சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு ஓய்வறை கட்டித்தர வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் வீட்டு மனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவ ராக ராஜூ, செயலாளராக வரதராஜ், பொருளாளராக பெருமாள் மற்றும் எட்டு பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடிவில், சிஐடியு மாவட்டச் செயலாளர் நா.வேலுச்சாமி நிறைவுரையாற்றினார்.