கோவை, ஜூன் 24- கோவை மாநகரில் 26ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடாது. பின்னால் அமர்ந் திருப்பவர்களும் தலைகவசம் அணிய வேண்டும் என மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (AIR HORN) பயன்படுத்துவோர் மீது மோட் டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி, 26ஆம் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை, மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கி ணைத்து, பல்வேறு குழுக்கள் அமைக் கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில், அதிகப்படியாக காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படு கிறதா? என்பதை சோதனையிட திட்ட மிடப்பட்டுள்ளது. எனவே, பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்களின் உரிமை யாளர்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வாகனங்களிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறி வுறுத்தப்படுகிறது. இதேபோல், தலைக்கவசம் அணி யாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஆகி யோர்கள் உயிரிழக்கும் சதவிகிதம் அதிகமாக உள்ளது. எனவே, நூறு சத விகிதம் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனை செயல்படுத்தும் விதமாக 26ஆம் தேதி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மேற்கொள்ள முடிவு செய் யப்பட்டுள்ளது. இதில், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன விதி களின் படி கடுமையான சட்ட நடவ டிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு ஒருவார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.