கொரோனாவைப்போன்ற கொடும் காலம்தான் அது...சொந்த சேமிப்பு பணத்தை அத்தியாவசிய தேவைக்குகூட செலவு செய்ய முடியாமல், வெறும் காகிதமாய் பணத்தாள்களில் காந்தியின் சிரிப்பை சகிக்க முடியாமல் வெறுத்துப்பார்த்த காலம் அது... உங்களுக்கு ஆளுநர் பதவியோ, அதிகாரத்தின் உச்சத்தில் அமர ஏதோ ஒரு பதவியோ கிடைக்கக்கூடும்... மக்கள் மாண்டதையும், அதன் ஓலத்தையும் கேட்டவர்கள் நாங்கள். ஆம் யார் என்ன சொன்னாலும் கொரோனா தொற்றைவிட கொடிய காலம்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை...
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம்
பண மதிப்பு இழப்பு சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மிகப்பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறு, குறு தொழில் செய்வோர் வங்கிகளின் கடனை நம்பி தொழில் செய்யாமல், தனியார் பைனான்ஸ் நிறுவனங்களை சார்ந்து செயல்படும் நிலை இருக்கும். இந்தப் பிரிவினருக்கு பண மதிப்பு இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பின் தொடர்ச்சியாக நிறைய சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போய்விட்டன. ஜவுளி தொழிலைப் பொறுத்தவரை 90 சதவீதம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் தான் உள்ளன. பணமதிப்பு இழப்பின் போது சரி பாதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இன்று பெரிய நிறுவனங் கள் மட்டுமே செயல்படும் நிலை தான் உள்ளது. பணமதிப்பு இழப்பின் தொடர்ச்சியாக கொரோனா பொதுமுடக்கம், மூலப் பொருள்கள் விலை உயர்வு என சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன.
இதை அரசு உட்பட யாரும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. சிறு நிறுவனங்கள் அழிந்து போனால் பரவாயில்லை என்று பெரிய நிறுவனங்கள் விரும்பு கின்றன. அரசும் அதற்கு உண்டான முறையில், அதற்கேற்ப செயல்படுகின்றது. ஒரே கூரை யின் கீழ் பத்தாயிரம் சீட் (தையல் இயந்திரங்கள்) அமைத்து செயல்படக்கூடிய பெரிய நிறுவ னங்கள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் ஜவுளி தொழில் சார்ந்த சாலையோர வியாபாரம், மூட்டை வியாபாரம் , தெருவோர வியாபாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் நன்றாக இருக்கின்றன. சிறிய அளவிலான நிறுவனங் கள் நன்றாக இல்லை. தற்போது நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, மக்கள் மறந்து போன தங்கள் வலியை நினைவுபடுத்துவதாக உள்ளது. இந்தத் தீர்ப்பினால் என்ன பயன்? பண மதிப்பு இழப்பின் போதே நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆறு ஆண்டுகள் முடிந்து போய்விட்டது. இந்த தீர்ப்பு அரசை திருப்தி படுத்துவது போல் உள்ளது. இதனால் மக்க ளுக்கு எந்த பயனும் இல்லை. இது முடிந்து போன விஷயத்தை நினைவூட்டுகிறது, கல்ல றைக்கு மலர் வளையம் வைத்தது போல!!!
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ்
கடந்த 1978ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்குக் கால அவகா சமாக 3 நாட்கள் வழங்கப்பட்டு, பிறகு மேலும் 5 நாட்க ளுக்கு நீட்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்த நீதிபதி தனது தீர்ப்பில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் அரசின் முடிவெடுக்கும் செயல்முறை குறைபாடுடையது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது லட்சக்க ணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது என்பதே உண்மை,” “நீதிபதி நாகரத்னா கூறியுள்ளது நடைமுறையை உணர்ந்து கூறியிருப்ப தாகத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் முழுக்கவும் இருக்கக்கூடிய ஒரு முடிவை, நாடாளுமன்றத்தில் கூட ஆலோசிக்கப்படாமல், பிரதமரே அறிவித்தார். அது மிகவும் தவறு. கடந்த சில ஆண்டுகளில், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. அவற்றுக்கான தொடக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான்,”
“எங்களைப் போன்ற குறுந்தொழில் செய்வோர், தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வார சம்பளம், நிலுவைத் தொகைகளைத் தருவது என்று அனைத்தையும் பணப் பரிவர்த்தனை மூலம் தான் மேற்கொண்டு வந்தோம். அப்படியிருந்த சூழலில், இந்த நடவடிக்கை வந்தது. அப்போது எங்களால் பணத்தைத் தேவைக்கேற்ப உடனடியாக எடுக்க முடியவில்லை. ஆகையால் சம்பளம் கொடுக்க முடியாத நிலை, மூலப் பொருட்களை வாங்க முடியாத நிலை போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டன. சொந்தப் பணத்தை எடுக்கவே நாள் கணக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது,” இந்த உண்மையை தொழில்முனைவோர்கள் நாங்களும் மறக்கவில்லை. வரிசையில் நின்ற மக்களும், தொழிலாளர்களும் மறக்கவில்லை என்றார்.
அ.முத்துப்பாண்டி, பள்ளிபாளையம்.
2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பி ழப்பு நடவடிக்கைகள் பொதுமக்களிடையே போதிய வர வேற்பு பெறவில்லை. ஒரு சதம் மக்கள் மட்டுமே இந்த அறிவிப்பை ஆதரித்தனர். பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா நோய்த்தொற்று ஊரடங் கால் பாதிக்கப்பட்டதைவிட, பணமதிப்பிழப்பு நடவ டிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம். அதனுடைய வலிகள் அதிகம். சிறுநூல் வியாபாரத்தில், மிகப்பெரிய அளவிற்கான முடக்க நிலை உருவா னது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவான கருத்து ஏமாற்றத்தை தருகிறது, என்றார்.
இலஞ்சி
மத்தியில் ஆள்பவர்கள், புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள். ஆனால், பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள்தான். மக்களைப்பற்றி ஆளும் அரசுகள் கவ லைப்படுவதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்தாலும், அவர்களுக்கு மக்களுடைய வலி கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் அனை வரும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களே! மேலும் இல்லத்தரசிகள் அன்றாடம் வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதில் கூட நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது, என இல்ல தரசி இலஞ்சி தெரிவித்துள்ளார்.
மு.சரவணன்
2016 ஆம் ஆண்டு நவம்பர் காலகட்டத்தில் என் னுடைய பேக்கரியில் மிகப்பெரிய அளவிலான, சில் லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. கடைக்கு வருபவர்கள் பெரும்பாலும், 500 1000 நோட்டுகளையே கொண்டு வந்தனர். அவர்களிடம் ரூபாய் நோட்டுகளை வாங் கிக் கொள்ள முடியாமலும், என்னிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டை செலுத்த முடியாமலும் மிகப்பெரிய தவிப்புக்கு உள்ளானோம். அசாதார நிலை ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள இந்த தீர்ப்பில் கூட மக்கள் பாதிப்புகளை சந்தித்ததை நேரடி யாக கண்டும் கூட ஆதரவான தீர்ப்பு அளித்திருப்பது ஏமாற்றத்தை தரு கிறது.
மதிவாணன், சூலூர்.
கையிலிருக்கும் பணம் செல்லாதா? என்கிற பதற் றத்தில் ஏடிஎம் வாசல்களில் ஒரு வர்க்கம் கூட்டம், கூட்ட மாக குவிந்துக்கொண்டிருக்க, கருப்புப்பணம் ஒழியப் போகிறது என மற்றொரு வர்க்கம் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் யாரும் அன்றாட தேவைகளுக்காக பணத்தை மாற்ற வரிசை யில் நிற்கவில்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நின்று பலர் உயிரை மாய்த்தனர். எந்த கார ணத்துக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆளும் தரப்பு சொன்னதோ, அது துளியளவும் நிறைவேறவில்லை என் பதே உண்மை.
லட்சுமி, சூலூர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது “நீங்கள் கனவு கண்ட புதிய இந்தியா பிறக்கப் போகிறது, 50 நாட் கள் பொறுத்துக் கொள்ளுங்கள். என் நோக்கத்திலோ அல்லது செயல்படுத்தியதிலோ தவறு இருந்தால் நாடு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார்” என பிரதமர் மோடி பேசினார். ஆனால், அவர்கள் சொன்னது போல கருப்புப்பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதா? அந்த நடவ டிக்கையின் மூலம் கிடைத்த பலன்கள் என்ன என்பது பற்றி எல்லாம் அரசோ, பிரதமரோ அல்லது இதர அமைச்சர்களோ வாய் திறந்து பேச மறுக்கிறார்கள்.
இளங்கோவன், கருவலூர்
திருப்பூர் மாவட்டம், கருவலூர் ஊராட்சியைச் சேர்ந்த மீன் வியாபாரி இளங்கோவன் என்பவர் கூறுகையில், பணமதிப்பிழப்பு என்று ஒன்றிய அரசாங்கம் அறிவிக்கும் முன்னர் மீன் வியாபாரம் அதிகமாக நடைபெற்றது. அதனால், வந்த ரூபாய் தாள்கள் 500, 1000 ரூபாய்களை மாற்றம் செய்வதற்காக ஸ்டேட் பேங்க் வங்கி வாசலில் பல மணி நேரம் கால் கடுக்க நின்று மாற்றம் செய்தேன். சில நபர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், வேறு நபர்களுக்கு ஆயிரத்திற்கு இருநூறு ரூபாய் கமிசன் கொடுத்து மாற்றம் செய்தனர். தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததை நினைத்தால், பலரிடமும் அந்த நோட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்ற நினைப்புதான் தோன்றுகிறது, என்றார்.
பின்னலாடை சிறு தொழில் உரிமையாளர் வேலுச்சாமி
ஆறு வருஷங்களுக்கு முன்பு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை காரணமாக தொழில் பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களிடமிருந்த பணத்தை மாற்ற முடியாமல் வங்கி வாச லில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற் பட்டது. எனது தொழிலுக்கு தேவையான நூலை எடுக்க முடியவில்லை. சராசரியாக ரூபாய் ஆறு ஏழு லட்சத்திற்கு நான் நூல் கொள்முதல் செய்வேன். பண மதிப்பு இழப் பினால் நான் இந்த நூலை எடுக்க முடிய வில்லை. மிகவும் சிரமப்பட்டேன். எல்லா பக்கமும் இந்த நெருக்கடி இருந் தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு நீடித்தது. டிஜிட்டல் பொருளா தாரம் என்று அரசு சொல்கிறது. ஆனால் அதை திடீரென அமல்படுத்தி இருக்க முடியாது. கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு உட னடியாக அதில் பழகவும் முடியாது, நடை முறை சாத்தியமும் இல்லை. தற்போது பொங் கல் பரிசு என பணம் கொடுத்தால் கூட அதை வங்கியில் செலுத்துவதை மக்கள் விரும்புவ தில்லை. பணமாக நேரில் கையில் கொடுக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். பண மதிப்பு இழப்பை பொறுத்தவரை பொருளா தாரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது தான் உண்மை. இவ்வாறு சிறு தொழில் முனைவோர் வேலுச்சாமி தெரிவித்தார்.
கதிரேசன்
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது எங்களுக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தியது. தொழில் வர்த்தகம் அப்படியே முடங்கி விட்டது. அடுத்த வேலை சாப்பாட் டுக்கே வழியில்லை என்று நிலைக்குப் போய் விட்டோம். கையில் இருந்த பணத்தை வங்கி வாசலில் காத்திருந்து, மாற்றுவதற்குப் படாத பாடு பட்டோம். அப்போது ஏற்பட்ட வீழ்ச்சியி லிருந்து மீள்வதற்கு ஏறத்தாழ இரண்டு வருட காலமானது. பணமதிப்பு நீக்கத்துடன் ஜிஎஸ்டி வரி வதிப்பும் சேர்த்து பாத்திர தொழிலை நசுக்கி விட்டது. கருப்பு பணத்தை மீட்பதாகவும் கள்ளப் பணத்தை ஒழிப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ரூபாய் 500 1000 நோட்டுகள் 99 சதவிகிதம் வங்கிக்கு திரும்பி வந்துவிட் டது. ஒரு எழுபது அல்லது 75 சதவிகிதம் பணம் மட்டும் வந்திருந்து மீதி பணம் வராமல் இருந் திருந்தால் 30 முதல் 25 சதவீதம் கள்ள நோட்டு இருந்தது அதை ஒழித்து விட்டார்கள் என்று சொல்லி இருக்கலாம். முழுவதுமாக பணம் திரும்பி வந்து விட்டால் பிறகு எங்கே அவர் கள் கள்ளப் பணத்தை ஒழித்து இருப்பார் கள். கருப்பு பணத்தை எப்படி மீட்டு இருப்பார் கள்? மண்பாண்ட தொழில் அழிந்தது போல எங் கள் பாத்திர தொழிலின் நிலையும் போய்க் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தற்போது அளித்திருக்கும் தீர்ப்பினால் என்ன பயன்? 5 நீதிபதிகளில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஒரு நீதிபதியின் தீர்ப்பு தான் எனக்கு உடன்பா டானது.
ராஜ்குமார், சேலம்.
சேலத்தைச் சேர்ந்த வாகனங்கள் பழுது நீக்குபவர் (மெக்கானிக்) ராஜ்குமார் என்ப வர் கூறுகையில், பணமதிப்பிழப்பு காரண மாக மோட்டார் தொழில் செய்து வந்த நான், இன்று கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது. மோட்டார் தொழில் உதிரி பாகங் கள் கடுமையான விலை உயர்வை சந்தித்தது. இதனால் சிறு முதலாளியாக இருந்த நான், தற் போது கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது.
என்.வள்ளிநாயகம்
மோடி ரூபாய் 500, 1000 செல்லாது என திடீ ரென அறிவித்த சமயத்தில் எங்கள் மகள் திருமணம் வைத்திருந்தோம். திருமணத்திற் காக சேமித்து வைத்த பணத்தை செலவிட முடியவில்லை. அதை மாற்றவும் முடியாமல் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. மகள் திருமணமே நடக்குமா நடக்காதா என்று மிகுந்த கலக்கமடைந்தோம். மிகுந்த சிரமத் திற்கு பிறகு தான் பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு இந்த திருமணத்தை நடத்தி னோம். இந்த சமயத்தில் நுண் கடன் நிதி நிறு வனத்தைச் சேர்ந்தவர்களும் கடனை கட்டுங் கள் என்று கடுமையாக நிர்ப்பந்தம் செலுத்தி னர். கட்டிய தாலியை கூட அடகு வைக்கும் நிலை ஏற்பட்டது. இது எனக்கு மட்டும் ஏற்பட்ட நிலைமை அல்ல. எங்கள் பகுதியிலேயே என்னைப்போல் 100 பேர் அல்ல ஆயிரம் பேர் கஷ்டப்பட்டார்கள். குழு கடன் கொடுத்த வர்கள் எங்களுக்கு கொடுத்த நெருக்கடி கொஞ்ச நஞ்சம் அல்ல. மோடியின் இந்த நடவடிக்கையால் எங் கள் குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, திருமணமும் சிரமப்பட்டு நடத்தினோம். அப் போது ஏற்பட்ட கஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு ஆறு மாத காலமானது. அதற்குப் பிறகு இப்போதும் நாங்கள் முழுமையாக மீண்டு விட்டோம் என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் ஏற்படும் கஷ்டம் போக போக பழக்கமாகி விடுகிறது. இப்போதும் கஷ் டத்தை சகித்துக் கொண்டு வாழும் நிலை தான் உள்ளது. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை பற்றி நாங்கள் வேறு என்ன சொல்வது? இவ்வாறு என்.வள்ளிநாயகம் கேள்வி எழுப்பினார்.