நாமக்கல், டிச.2- விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பள்ளி பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் விசைத் தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்க ளுக்கு 75 சதவிகித கூலி உயர்வு வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் அ.அசன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப் பாட்டத்தில் கடந்த 15.3.2019 அன்று போடப்பட்ட இரண்டு வருட ஒப்பந்த மானது, தற்போது காலாவதியாகி விட்டது. இந்நிலையில் ஒன்றிய அர சின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, அரிசி, எண்ணெய், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை வாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழி லாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசும், விசைத்தறி உரி மையாளர்களும், விசைத்தறி தொழிலாளர்களின் 75 சதவிகித கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென முழக்கங்கள் எழுப் பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோ கன், சங்க ஒன்றிய செயலாளர் எஸ். முத்துக்குமார், சங்க துணை தலை வர் அங்கமுத்து, சதாசிவம், சிஐடியு சங்க நிர்வாகிகள், விசைத்தறி தொழிலாளர்கள் என 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடி வில், வருவாய் ஆய்வாளர் ஆர்.கார்த்திகாவிடம் கோரிக்கை மனுவை விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் வழங்கினர்.