உடுமலை, ஜூலை 19. உடுமலை மலையாண்டிபட்டி னத்தில் கைத்தறி நெசவாளர்கள் குடும் பங்களின் வாழ்வாதாரம் காத்திடக் கோரி ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மலையாண்டிபட்டினம் விநாய கர் கோயில் முன்பு நடைபெற்ற உண் ணாவிரத போராட்டத்தில், தமிழ்நாட் டின் தொன்மை வாய்ந்த பாரம்பரிய தொழிலாக கைத்தறி நெசவு உள் ளது. இந்த தொழிலை நம்பி பல்லா யிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றனர். ஆனால், தற்போது நெச வுத்தொழில் மூலப்பொருட்களான பட்டு நூல் மற்றும் ஜரிகை போன் றவை விலை நிலையாக இல்லாமல் அதிக ஏற்றம், இறக்கமாக இருக்கி றது. இதனால், கைத்தறிக்கு ஒதுக்கப் பட்ட சேலை ரகங்கள் அனைத்தும் விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏது மின்றி அளவிற்கு அதிகமாக தயா ரிக்கப்படுகிறது. இதனால், கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு கைத்தறி நெசவாளர் களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, நெசவாளர்களுக்கு என தாலுகா வாரியாக தனி கூட்டுறவு வங்கி ஏற்படுத்த வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறியீடுடன் 11 விசைத்தறையில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது. பார்டர் டிசைன் உடன் கூடிய பருத்திச் சேலை பட்டுச் சேலை கோராப்பட்டு வேட்டியில் துண்டு லுங்கி ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங் களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது. 2007 லிருந்து 2013 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்து வந்த கைத் தறி நெசவாளர் நலன் காப்பீடு திட்டம் மருத்துவ அட்டையை மீண்டும் இலவசமாக கிடைக்க செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி குரல் குட்டை வாளவாடி, இராமே கவுண்டன்புதூர், மலை யாண்டிபட்டினம், பொதுமக்கள் சுமார் 700க்கும் மேற்பட்ட நெசவாளர் கள் குடும்பங்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.