கடும் பனிமூட்டம்: ஓட்டுனர்கள் கடும் அவதி
நாமக்கல், பிப்.3- இராசிபுரத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டு னர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சுற்று வட்டாரத்தில், இர வில் குளிரும், பகல் நேரங்களில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், திங்களன்று என்றும் இல்லாத அள விற்கு அதிகாலை முதல் இராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. கடும் பனிமூட்டம் காரணமாக ராசிபுரம் ரயில் நிலையத்தில் சிக்னல் தெரியாத தால் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் சாலையில், பேருந்து, லாரி மற்றும் சரக்கு வாகன ஒட்டுனர்கள் சாலை மற்றும் எதிரே வரும் வாகனம் தெரியாததால் தங்கள் வாகனத் தின் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனத்தை ஓட்டி சென்றனர்.
பாஜக பிரமுகர்கள் கடையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
கோவை, பிப். 3- பாஜகவை சேர்ந்த தங்க கட்டி வியாபாரிகள் வீட்டில் திங்களன்று ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். தங்க கட்டி வியாபாரிகள் பலர் முறையாக ஜிஎஸ்டி கட்டுவ தில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும், தங்க கட்டிகளை பதுக்கிவைத்து கணக்கில் காட்டாமல் விற் பது என்கிற புகாரும் வந்த நிலையில், ஜிஎஸ்டி அதிகாரி கள் இந்த சோதனை மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதனிடையே, கோவை வைசியாள் வீதி மற்றும் ராஜ வீதியில் உள்ள கோஸ்வான் சில்வர், வெள்ளிக் கடையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். இந்த கடை பாஜக-வை சேர்ந்த சகோகரர்கள் கார்த்திக் மற்றும் வாசு தேவன் ஆகியோருக்கு சொந்தமானது. கார்த்திக், தென் இந் திய தங்ககட்டி வியாபாரிகள் சங்க தலைவராக உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில், தங்க கட்டி விபா யாரத்தில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்
நாமக்கல், பிப்.3- மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் உட்பட 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டு மனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரை வீட்டு மனை பட்டாக்கள் வழங்காமல் உள்ளது. உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பெயருக்காக நடத்தப்படும் முகாம்களின் மட் டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படு வது தவிர்த்து அனைத்து தினங்களிலும் மாற்றுத் திறனாளி கள் மனுக்களை பெற்று உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆபாச படங்களை குழந்தையிடம் காட்டுவது தொடுதல் இல்லாமல் நடக்கும் பாலியல் வன்கொடுமை
உதகை, பிப்.3- ஆபாசமான படங்களை குழந்தையி டம் காட்டுவது, குழந்தைகளை ஆபாச மாக படம் எடுப்பது இவை அனைத்தும் தொடுதல் இல்லாமல் நடக்கும் பாலி யல் வன்கொடுமை என்று சட்டப் பணி கள் ஆணைக்குழு செயலாளர் தெரிவித் தார். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்குதல், சர்ச்சைகளைத் தீர்க்க லோக் அதாலத் களை நடத்துதல், சட்ட விழிப்புணர்வு அறிக்கைகளை வெளியிடுதல் உள் ளிட்ட பணிகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகி றது. மேலும் சட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் - 2012 (போக்சோ) குறித்து போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சி உதகையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் திங்களன்று நடைபெற்றது. இதற்கு மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.செந்தி்குமார் தலைமை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர் பாலமுருகன், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதா வது, பாலியல் எண்ணத்துடன் ஒரு குழந்தையிடம் பேசுவது, குழந்தையின் உடல் பாகங்களை காட்ட சொல்வது, ஒரு நபர் தன்னுடைய உடல் பாகத்தை பாலியல் எண்ணத்துடன் குழந்தைகளி டம் காட்டுவது, ஆபாசமான படங்களை குழந்தையிடம் காட்டுவது, குழந்தை களை ஆபாசமாக படம் எடுப்பது இவை அனைத்தும் தொடுதல் இல்லாமல் நடக்கும் பாலியல் வன்கொடுமை ஆகும். இது போக்சோ சட்டம் பிரிவு 11 இன் அடிப்படையில் தண்டனைக் குரிய குற்றமாகும். இதேபோல் 18 வய திற்கு குறைவான ஆண் குழந்தை யானாலும், பெண் குழந்தையானாலும் சரி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்வது, துன்புறுத்துவது, தாக்குதல் நடத்துவதும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற் றங்களில் கடுமையான நடவடிக்கை கள் எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் காவல் கண்காணிப் பாளர் மணிகண்டன், உதகை காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செவிலியரை கத்தியால் குத்திய இளைஞர் கைது
கோவை, பிப்.3- கோவை (ஜிகேஎன்எம்) தனியார் மருத்து வமனையில் செவிலியரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் பிரியா. அவர் தங்கி பணி புரிந்து வரும் தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள மக ளிர் விடுதிக்குள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சேர்ந்த சுஜித் என்ற இளைஞர் நுழைந்துள்ளார். அவரை விடுதிக் காப்பா ளர் தடுத்து உள்ளார். விடுதிக் காப்பாளரை கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளே சென்ற சுஜித், பிரியாவின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்த முற்பட்டுள்ளார். பிரியா தப்ப முயன்ற போது அவரது கைகளில் வெட்டுக் காயம் உண்டானது. இதை அடுத்து அங்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்து வமனை காவலாளிகள் சுஜித்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து விடுதிக் காப்பாளர் அளித்த புகாரில் பேரில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பிரியாவும் சுஜித்தும் சில ஆண்டுகளாக காத லித்து வந்ததாகவும், பிரியா திடீரென பேசுவதை நிறுத்தியதால் சுஜித் இந்த தாக்கு தலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
முலாம் பூசிய செம்பு கட்டிகளை தங்கம் எனக்கூறி ரூ.15 லட்சம் மோசடி
திருப்பூர், பிப்.3- உத்தரபிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்தவர் வினய் பிர தான் (50). திருப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். பெரியார் காலனி பகுதியில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த நசீம் மனகர் (50), மொயின் (25) ஆகியோர் அவரிடம் அறிமுக மாகி உள்ளனர். தங்கக் கட்டி இருப்பதாகக் கூறி விலை பேசி யுள்ளனர். எனவே திருமுருகன்பூண்டியில் உள்ள உணவ கத்தில் நசீம் மனகர், மொயின் இருவரிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்து, 1 கிலோ தங்கக் கட்டிகளை வினய் பிரதான் வாங்கி யுள்ளார். சோதனை செய்தபோது, தங்க கட்டிகள் செம்பு முலாம் பூசி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் வினய் பிரதான் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புலி நடமாட்டம் பொய்: வனத்துறை விளக்கம்
புலி நடமாட்டம் பொய்: வனத்துறை விளக்கம் உதகை, பிப்.3- மஞ்சூர் எடக்காடு பகுதியில் புலி சுற்றுவதாக வெளியான புகைப்படத்தால் பொதுமக்கள் கிலி அடைந்தனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து புலி நடமாட் டம் இருப்பதாக பரவிய படம் பொய்யானது என விளக் கம் அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ் சூரை சுற்றிய வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட் டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வனப் பகுதி குறைந்து வருவதால் ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகு திக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்கு கள் கால்நடைகளை அடித்து கொன்றும் விளைநிலங்களை யும் சேதப்படுத்தி விட்டும் செல்கின்றன. இதனால் அந்த பகுதி களில் அவ்வப்போது மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வனத்தில் இருந்து வெளி யேறிய ஒரு புலி மஞ்சூர் - உதகை சாலைக்கு வந்தது. பின்னர் அங்குள்ள மின்வாரியம் அலுவலகம் பாக்குறை அருகே சுற்றி திரிந்தது. இதனை அந்த வழியாக வாகனத் தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைர லாக பரவி வந்தது. இதனால் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் புலி இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் மார்பிங் செய் யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புலி இருப்பதாக பரவிய தகவல் பொய்யானது என வனத்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது, பஜார் பகுதியில் புலி இருப்பது போன்ற படம் வெளியாகி கடந்த 2 நாட்களாக பலருக்கும் தூக்கம் இல்லாமல் போய்விட்டது. பணி முடிந்து இரவு தாமதமாக வீடு திரும்புபவர்கள் பணிக்கு செல்லவில்லை. ஊர் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. தற்போது வனத்துறையினர் ஆய்வில் புலி இல்லை என்றும், சமூக வலைதளத்தில் யாரோ எடிட் செய்து தவறாக தகவல் வெளியிட்டதும் தெரிய வந்துள்ளது இதுபோல் தகவலை பரப்புவோர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தண்ணீரில் மூழ்கி தாய், இரு மகன்கள் உயிரிழப்பு
நாமக்கல், பிப். 3- நாமக்கல் அண்ணா நகரில் தாய் மற் றும் இரு மகன்கள் தண்ணீர் தொட்டி யில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அருகே கொளத்துபாளையத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி யில் கௌரவ விரிவுரையாளராக பணி புரிந்து வருகிறார். அவருக்கு இந்து மதி என்ற மனைவியும் யாத்விக் ஆர் வின் மற்றும் நிவின் ஆதிக் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் நாமக்கல் அண்ணா நகர் போது பட்டி காலனி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு கோவில் திரு விழாவிற்கு வந்துள்ளார். இந்நிலை யில் திங்களன்று காலை யாதவிக் ஆர் வின் வயது 3 குழந்தை வீட்டு முன்புற முள்ள நிலத் தொட்டியில் தவறி விழுந்து உள்ளான். அதை கண்ட அவரது அம்மா இந்துமதி தனது கைக்குழந்தை யுடன் நிவின் ஆதித்தை மீட்க முயற்சித்துள்ளார். அப்போது அவரும் தவறி தண் ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள் ளார். தகவலறிந்த அவரது உறவி னர்கள் மூவரது பிரேதத்தையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த னர். இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
வாலிபர் தற்கொலை போலீசாரை கண்டித்து போராட்டம்
சேலம், பிப் 3 - தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் வாலிபர் தற் கொலை செய்து கொண்ட நிலையில், அந்நிறுவனம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் கணக்குப்பட்டி பகுதி யைச் சேர்ந்த அய்யன் துரை (30) தறித்தொழில் நலிவடைந்த காரணத்தால் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந் தார். தொடர்ந்து தவனை செலுத்தி வந்த நிலையில், 19 ஆவது தவணை கட்டவில்லை. இதனையடுத்து, தனியார் நிதி நிறுவ னம் கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, தனியார் நிதிநிறுவன மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்தும் திங்க ளன்று அய்யன் துரை உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதனை யடுத்து, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை உறுதியளித்ததை தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து அய்யன் துரையின் உறவினர்கள் கூறுகை யில், வங்கி மேலாளர் அய்யன் துரையை பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் போலீ சார் உரிய நடவடிக்கை எடுக்காமல் நிதி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த வழக்கை திசை திருப்ப பார்க்கின்ற னர். மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப் பட்ட நிதி நிறுவன மீது நடவடிக்கை எடுத்து கணவனை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வாங்கித் தர வேண்டும் இல்லை யென்றால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.