districts

img

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், ஜூலை 18- பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என வாலிபர் சங்க  மாநாடு வலியுறுத்தி உள் ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சங்க அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு நடைபெற் றது. ஒன்றிய தலைவர் ஆர்.லெனின் தலைமையில் நடை பெற்ற மாநாட்டை துவக்கி வைத்து வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.கண்ணன் உரையாற்றினார். ஒன்றிய செய லாளர் எம்.லட்சுமணன் வேலை அறிக்கையையும், பொருளா ளர் ஹேமலதா வரவு, செலவு அறிக்கையையும் முன்வைத் தனர். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரம் உயர்த்த வேண் டும். தாஜ் நகர் பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுத்து, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய  வேண்டும். பள்ளிபாளையத்தில் தொடர்ந்து நடைபெறும் சட்டவிரோதமான மது, கஞ்சா விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்கத்தின் ஒன்றிய தலைவராக எம்.லட்சுமணன், ஒன்றிய செயலாளராக நவீன், பொருளாளராக ஹேமலதா உட்பட 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ் நிறைவுரை யாற்றினார்.