districts

img

அரசு ஊழியர்களை புறக்கணித்த பட்ஜெட் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 21- தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து  அறிவிப்பு  வெளியிடாததை கன்டித்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண் டும். முடக்கப்பட்ட அகவிலைப் படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம். சிறப்பு  காலமுறை ஊதியம் மற்றும் தினக் கூலியில் பணிபுரியும் ஆசிரி யர்கள். சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் வருவாய்  கிராம உதவியாளர்கள், ஊர்ப் புற  நூலகர்கள் வனப் பாதுகாவலர் கள், வட்டார மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள், மகளிர் திட்ட  ஊழியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் கால முறை ஊதியம்  வழங்க வேண்டும்.

காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பிட  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் தொடர் போராட் டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி வட்டாட்சியர் அலுவ லகம் மற்றும் தருமபுரி வட்டார  வளர்ச்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்டசெய லாளர் குமரன் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செய லாளர் ஏ.சேகர், பொருளாளர் பி.எஸ்.இளவேனில் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர்.  இதேபோன்று, தருமபுரி அரசு  மருத்துவக்கல்லூரி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு மேற்கு   வட்ட தலைவர் ராஜ்கண்ணு, தரும புரி சுகாதார பணிகள் இணை இயக் குநர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு நாக ராஜ் ஆகியோர் தலைமை வகித் தனர். தருமபுரி மாவட்டம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஈரோடு'

இதேபோன்று அரசு ஊழியர் களின் கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என ஈரோடு மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. ஈரோடு - சென்னிமலை சாலை யில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ச. விஜயமனோகரன் மற்றும் சீனி வாசன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் எம்.மகா லிங்கம் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க தலைவர் ஏ.ராம லிங்கம் வட்டக்கிளை செயலாளர்  ரா.கருப்புசாமி, வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் ரகு  ஆகியோர் கண்டன உரையாற்றி னர். பவானி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றது. 

சேலம்

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் சுரேஷ், அரசு தொழிற் பயிற்சி நிலைய ஊழியர் சங்க மாநில நிர்வாகி திருநாவுக்கரசு, சேலம் வட்டக் கிளை தலைவர் ஸ்ரீ பதி ஆகியோர் பங்கேற்றனர். சேலம் மேற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் ந.திருவே ரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.  இதேபோன்று கோவை, நீலகிரி, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.