districts

img

சிவன்மலை கோயில் அலுவலர் மீது தாக்குதல்: எஸ்.ஐ.யை கைது செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப். 24 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை கோயில் அலுவ லக கண்காணிப்பாளர் சி.சு.பால்ராஜ்  மீது தாக்குதல் நடத்திய ஆயுதப்படை  சார்பு ஆய்வாளர் துரைசாமியை கைது  செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தினர் கருப்புக் கொடி யேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர். காங்கேயம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக வியாழனன்று மாலை  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்  ஏ.ராணி தலைமை வகித்தார். தைப்பூசத்  திருநாள் அன்று, அரசு அலுவலரைத்  தாக்கிய காவல் சார்பு ஆய்வாளர் துரை சாமியை கைது செய்ய வேண்டும், அர சுப் பணியை செய்ய விடாமல் பக்தர்க ளுக்கும், கோயில் பணியாளர்களுக் கும் அச்சுறுத்தல் விடுத்து, பொது அமை தியை சீர்குலைக்கும் வகையில் தாக்கு தல் நடத்தியதால் அவரை பணியிடை  நீக்கம் செய்ய வேண்டும், சீருடை அணி யாமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்ட அவர்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றோர் முழக்கம் எழுப்பி னர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழி யர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி. பரமேஸ்வரி தொடக்கி வைத்தார். இந்து  சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவ லர் சங்க மாநிலத் தலைவர் தெ.வாசுகி,  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் இரா.ராஜ்குமார்  ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப்  பேசினர். சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் மா.பாலசுப்பிரமணியன் கண்டன  உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க  மாநிலத் தலைவர் மு.அன்பரசு  இப்போராட்டத்தை நிறைவு செய்து  வைத்து உரையாற்றினார். அப்போது  அவர் கூறுகையில், அரசு ஊழியரை  பணி செய்ய விடாமல் தடுத்தால்,  இரண்டு ஆண்டு கடுங்காவல் தண் டனை விதிக்க சட்டவிதி உள்ளது. அதன் படி ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்  துரைசாமியை கைது செய்ய வேண்டும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில தலைமை கலந்தா லோசனை நடத்தி அடுத்தக்கட்டமாக மாநில அளவில் போராட்டம் நடத்தப்ப டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதில் பெருந்திரளான அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழி யர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். முருகசாமி நன்றி கூறினார்.