சென்னை,நவ.11- திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கற்க ளால் உடைத்தும், பிடுங்கியும் சித்திரவதை செய்ததாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதற் கட்டமாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசா ரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து, விசாரணையை முடித்த சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இதற் கிடையில் பல்வீர் சிங், ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு மற்றும் யுபிஎஸ்சி தேர்வாணையத்துக்கு சிபிசிஐடி காவல்துறையினர் கடிதம் அனுப்பியிருந்த னர்.
இந்த நிலையில், பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசா ரணையை துவங்க சிபிசிஐடி காவல் துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித் துள்ளது.