districts

img

சூதாட்டத்திற்கு உடந்தையா ஆளுநர் ரவி? திருப்பூரில் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மார்ச் 21- ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பி அனுப்பியதுடன், பொதுமக்களிடம் ஜனநா யக மாதர் சங்கத்தினர் பெற்ற கையெழுத்து களையும் வாங்காத ஆளுநர் ரவியை கண் டித்து, மாதர் சங்கத்தினர் திருப்பூர் மாநக ராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழ் நாடு அரசு நிறைவேற்றிய மசோதாவை திருப்பி அனுப்பியதுடன், பொதுமக்களிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பெற்ற ஒரு லட்சத்து முப்பதாயிரம் கையெழுத்துக்களை வாங்கவும் தமிழக ஆளுநர் முன்வரவில்லை. இதைக் கண் டித்து அனைத்திந்திய ஜனநாக மாதர் சங்கம்  சார்பில் செவ்வாயன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை  தலைவர் எஸ்.பானுமதி தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரா, மாவட்ட செயலாளர் கே.சரஸ்வதி, துணைத்தலை வர் ஆர்.மைதிலி, துணைச்செயலாளர் ஆர். செல்வி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாதர்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கு பெற்று சூதாட்டத்துக்கு உடந்தையாக செயல்படுகிறாரா ஆளுநர் என்று கேள்வி எழுப்பி கண்டனம் முழங்கினர்.