சேலம், பிப்.25- போக்குவரத்து ஊழியர்களின் பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியு றுத்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பி னர் சேலத்தில் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப் படியை உடனடியாக வழங்க வேண்டும். பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். முழுமையான மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண் டும். ஓய்வுபெற்றோர்களுக்கு உரிய பணப்பலன்களை உடன டியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு அமைப் பின் மண்டல தலைவர் பி.என். பழனிவேலு தலைமை வகித்தார். இதில், மண்டல செயலாளர் அன் பழகன், மண்டல பொருளாளர் அழகேசன், அரசு விரைவு போக்கு வரத்து ஓய்வுபெற்றோர் சங்கத் தின் நிர்வாகிகள் மணிமுடி, வாசன் உள்ளிட்ட சேலம், நாமக்கல், தரு மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் இருந்து சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோவை கோவையில் மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணி மனை முன்பு முற்றுகைப் போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு சங்கத்தின் மண்டல தலை வர் ஜி.பழனிச்சாமி தலைமை வகித்தார். போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் பி.செல்வ ராஜ், நிர்வாகிகள் ஆர்.சேது ராமன், சுரேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும், தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொருளாளர் கிருஷ்ணராஜ், துணைத் தலைவர்கள் மனோ கரன், கந்தசாமி, ராஜு, பாலசுப்ர மணியம், துரைராஜ், கருப்பசாமி உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர்.