districts

img

காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற அரசு நிவாரணம் வழங்க வேண்டும்:

உடுமலை, மார்ச் 19- உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிக ளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பள வில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் கணிசமான வருமா னத்தைப் பெற்று வந்த விவசாயிகள் தற்பொ ழுது பருவ மழை இல்லாமல் போனதால் தென்னை மரங்களை காப்பாற்ற தண்ணீரை  விலைக்கு வாங்கி ஊற்றும் சூழலுக்குத் தள் ளப்பட்டுள்ளனர். மேலும், விவசாய நிலங்க ளில் காய்ந்த மரங்களை முழுமையாக அகற்ற சில ஆயிரம் ரூபாய் செலவு செய்ய  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, பருவ மழை இல்லாததால், இப்பகுதியில்  தென்னைகள் காய்ந்து வருகிறது. மேலும் ஏற் கனவே காய்ந்து போன தென்னை மரங் களை அகற்ற சில ஆயிரம் செலவு செய்ய  வேண்டியுள்ளது. முன்பெல்லாம் செங்கல் சூலை உரிமையாளர்கள் காய்ந்து போன மரங்களை எடுத்துச் சென்றார்கள். இப்போது  பல புதிய தொழில் நுட்பங்கள் செங்கல் சூலைக்கு வந்ததால், மரங்களை எடுக்க யாரும் வருவது இல்லை. இதனால் மரங் களை எங்களால் அகற்ற முடியாமல் உள் ளது. நிலங்களில் விவசாயம் எதுவும் செய்யா  முடியாமல் இருக்கிறோம். தமிழக அரசு காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற  எங்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்  என்றார்கள்.