அவிநாசி, ஏப்.18- அரசுத்துறை அதிகாரிகள் சோதனை என்கிற பெயரில், வியாபாரி களை அச்சுறுத்தி பணம் பறித்தால் சிறை தான் முடிவு என வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட, அவி நாசி அனைத்து வியாபாரிகள் புதிய சங் கம் துவக்க விழா மற்றும் உறுப்பினர் சான்றிதழ் வழங்கும் விழா அவிநாசியில் திங்களன்று நடைபெற்றது. இவ்வி ழாவிற்கு, அவிநாசி அனைத்து வியாபா ரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, அவி நாசி மளிகை வியாபாரிகள் சங்கத் தலை வர் தங்கவேல், மாவட்ட மெடிக்கல் அசோசியேசன் சங்கத் தலைவர் பழனிச் சாமி, அவிநாசி ஜவுளி வியாபாரிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன், திருப் பூர் உணவக உரிமையாளர் சங்க பொரு ளாளர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், மாநில தலைவர் விக் கிரமராஜா பேசியதாவது, அரசு துறை அதிகாரிகள் கடைகளுக்குள்ளே சோத னை செய்கிற போது, வியாபாரிகளை அச்சுறுத்தி பணம் வாங்குகிற சூழல் இருக்கிறது. உணவு பாதுகாப்பு, தொழி லாளர் துறை, காவல் துறை, வணிக வரித் துறை உள்ளிட்டோர் வியாபாரி களை மிரட்டி பணம் பறித்தால் சிறை தான். வியாபாரிகளுக்கு சட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் வரக்கூடிய சட்ட வடிவமைப்புகள் எல் லாம் தமிழில் தான் வர வேண்டும். ஈரோட் டில் வணிகர்கள் சங்க 40 ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் அவி னாசியிலிருந்து ஆயிரம் வணிகர்கள் என தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். முடிவில் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம் செய லாளர் அபுசாலி நன்றி தெரிவித்தார்.