districts

மலையக விதிமுறைகளை பின்பற்றாமல் உதகையில் அரசு கட்டுமானப்பணிக்கு எதிர்ப்பு

உதகை, ஜன.23- எந்தவிதி மலையக விதிமுறைக ளையும் பின்பற்றாமல் உதகையில்  அரசு சார்பில், சாகச விளையாட்டுக் கான கட்டுமானப்பணிகள் மேற்கொள் ளப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள படகு இல்ல வளாகத்தில் சாகச விளை யாட்டுக்களுக்கான வசதிகளை ஏற்ப டுத்த, சுற்றுலாத்துறை ரூ.5.5 கோடி நிதி  ஒதுக்கியது. அதற்கான கட்டுமான பணி  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவக்கப் பட்டது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல்  பாதிப்பு மதிப்பீடு செய்யப்பட்டதா? என் பதை மலையக கட்டட விதிகளின்படி, மாவட்ட நிர்வாகம் பகிரங்கமாக தெளி வுபடுத்த வேண்டும். ஏரி மற்றும் அதன்  சுற்றுப்புறங்கள் ஒரு அறியப்பட்ட ஈர நிலம் மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பாகும். இது பல ஈரநிலம் மற் றும் நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங் கினங்களை ஆதரிக்கிறது. இதில் உள் நாட்டு மீன் இனங்களும் அடங்கும். பணி களைத் தொடங்குவதற்கு முன்பு, தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மலைப் பகுதி கட்டட விதியின்படி தேவையான அனுமதிகளை பெற்றதா? என்பதை அதிகாரி தெளிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் பொது நல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரியில் எந்தவொரு வணிகக் கட் டுமானத்திற்கும், ஒருவர் பல்வேறு துறைகளிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.

மாநிலத்தில் உள்ள மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண் டும். அத்தகைய தடையில்லா சான்று  துறைகளிடமிருந்து பெறப்பட்டதா? என் பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், மேற்கண்ட பணி களைத் தொடங்குவதற்கு முன் அனு மதி பெறாமல், விதிமுறைகளை கடைபி டிக்காமல் வெறுமனே பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. மேலும், மலைப்ப குதி கட்டட விதிமுறைகளின்படி, ஏரி யைச் சுற்றியுள்ள 200 மீட்டருக்குள் எந்த வொரு கட்டுமானமும் தடைசெய்யப் பட்டுள்ளது. இது இயற்கையான சூழல்  மற்றும் சுற்றுச்சூழலை உறுதி செய்வதா கும். ஏரியின் பகுதி கான்கிரீட் கட்ட மைப்புகளால் தூர்வாரப்படுவ தில்லை. அப்படி இருக்கும்போது, சுற் றுலா வளர்ச்சிப்பணிகள் என்ற பெய ரில், ஏரி வளாகத்திலும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளிலும் மெகா கட்டுமா னங்கள் கட்ட அனுமதிப்பது ஏன்? ஊட்டி  ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகு திகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்த  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடப்போவதாக வழக் கறிஞரும், சமூக ஆர்வலருமான கே.ஸ்ரீ ஹரி தெரிவித்துள்ளார். மேலும், 1993 ஆம் ஆண்டு கொண்டு  வரப்பட்ட மாஸ்டர் பிளான் சட்டத்தை மீறுபவர்கள் மீது, மின்சாரம், குடிநீர்  துண்டிப்பு, கட்டடத்திற்கான சீல் வைக் கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வா கம் மேற்கொண்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் அரசு மேற்கொள் ளும் பணிகளுக்கு மட்டும் எந்த விதிமு றைகளும் கடைப்பிடிக்காமல் நடந்து  வருவது மக்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.