தருமபுரி, மார்ச் 1- தருமபுரியில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர் சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட ஊதி யம் வழங்ககோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டு பிப்.2 தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் தருமபுரி யில் நடைபெற்றது. இந்த போராட் டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலை வர் கோ.பழனியம்மாள், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி உள் ளிட்ட 15 ஊழியர்கள் மீது அன் றைய அதிமுக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டது. இதன்பின் தருமபுரி ஜேஎம் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தபட்ட அனை வரையும் விடுதலை செய்து நீதி பதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கில் இருந்து விடுதலை பெற்ற தலைவர்களை, சங்க நிர்வா கிகள் உற்சாகமாக வரவேற்றனர்.