நாமக்கல், ஜன.22- உடலுறுப்பு தானம் செய்த இளைஞருக்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி ஆகாஷ் (23). பட்டயப்படிப்பு முடித்துள்ள இவர், பகுதிநேர பொறியியல் படிப்பு படித் துக் வந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் சென்ற இவர், சாலையை கடக்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் ஏற்பட் டது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள சிம்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட் டது. இந்நிலையில், பெற்றோரின் விருப்பப் படிகணபதிஆகாஷின் சிறுநீரகம், இதயம், கண்கள்,உள்ளிட்ட உடலுறுப்புகள் தான மாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதனையடுத்து அவரது உடல் ஞாயிறன்று தாஜ் நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு அரசு சார்பில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அரசு மரி யாதை செய்தார். அதன்பிறகு கணபதி ஆகா சின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.