திருப்பூர், செப்.7 - திருப்பூர் அய்யங்காளிபாளை யம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் சிறப்பாசிரியர் (ஓவியம்) எஸ்.கனகராஜுக்கு, மாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம்தேதி, சென்னையில் மாநில பள் ளிக்கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி, நல்லா சிரியர் விருதை, ஆசிரியர் கனகரா ஜிற்கு வழங்கினார். சென்னை மயி லாப்பூரில் செயல்பட்டு வரும், தமிழ கக் கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவ னம் சார்பில், ஆசிரியர் கனகரா ஜிற்கு, ஆசிரியர் செம்மல் என்ற விரு தும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இந்த விருதை வழங் கினார். இதுகுறித்து நல்லாசிரியர் விருது பெற்ற கனகராஜ் கூறுகையில், அய் யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகி றேன். மாணவர்களுக்கு ஒழுக் கத்தை கற்றுத் தருவதே கல்வியின் முதல் படி என்பதால் அதற்கு முன்னு ரிமை அளிப்பேன். ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளும் மாணவர்கள், தானாகவே படிப்பில் ஆர்வம் செலுத்த தொடங்கி விடுவார்கள். அத் துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பது முக்கியம் என்பதையும் மாணவர்க ளுக்கு கற்றுத் தருகிறேன். மாணவர் கள் நலன்களை பாதுகாக்கவும் கவ னம் செலுத்தி வருகிறேன். வளர்ந்து வரும் நாகரிக உலகில் செல்போனில் மாணவர்கள் தங்களை மறந்து அதன் பின்னே செல்கின்றனர். அவர்களை நேர்வழிப்படுத்தி புத் தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்தி ஏட்டுக்கல்வியின் முக்கியத்துவத் தையும் உணர்த்தி வருகிறேன். மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகி யோரது பிறந்த நாட்கள், பள்ளிக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோ ரிடம் மரக்கன்றுகள் நடுவதை ஒரு முக்கிய பணியாக செய்து வருகி றோம். இதனால் 150 க்கும் மேற்பட்ட மரங்கள் எங்கள் பள்ளியில் தற்போது உள்ளன. எங்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வளர்ச்சிக்குழு ஆகியவை நல்ல ஒத்துழைப்பு வழங்கியதால் எங்கள் பள்ளியை அடுத்த கட்டத்துக்கு மே ம்படுத்தி உள்ளோம்.திறமையான ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் சேர்த்து அவர்க ளுக்கு ஊதியம் வழங்கி வருகின்ற னர். பள்ளிக்குத் தேவையான வசதி களுக்காக நிதி திரட்டுவதிலும் எங் கள் பள்ளி வளர்ச்சிக் குழுவினர் முனைப்புடன் செயல்படுகின்ற னர். இந்த நல்லாசிரியர் விருது மாணவர்களின் கல்வி நலனுக்கு, மென்மேலும் என்னை செயல்பட ஊக்கப்படுத்தும் என்றார்.