சென்னை,மே 11-சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 94 வயதான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு அரசு சார்பில் குடியிருக்ககடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார். சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்தகட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்தஅரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். அதேபோல அரசிடம் மாற்று வீடு கேட்காமல் ஆர்.நல்லகண்ணுவும் வெளியேறினார். அங்கிருந்து வெளியேறிய அவர்கே.கே. நகரில் வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார்.தலைவர்கள் கண்டனம்ஆர்.நல்லகண்ணுவுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லகண்ணு ஐயா, 12 ஆண்டு களாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. நல்லகண்ணு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், 94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம், தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா உள்பட பலரும் அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.