அவிநாசி, பிப்.25- அவிநாசி அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த நடுவச் சேரி கடுக்கன் காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் சமூக சமத்துவ மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பயி லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல் பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பை யும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் சமூக சமத்துவ மற்றும் மேம்பாட்டு அமைப் பின் நிர்வாகிகள் பாண்டி செல்வி, நடுவச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.