கோவை, ஆக.28- கோவையில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் கார் போட்டியில் சீறிப்பாய்ந்த கார்களின் சகாசங்கள் பார்வை யாளர்களை பரவசப்படுத்தியது. பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற் றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப் பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, 26 ஆவது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் முதல் சுற்று போட்டி கள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஜேகே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி கோப்புகான இருசக்கர வாகன பந்த யம் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட் டது. 10 சுற்று 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தேசிய அளவில் சிறந்த கார் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையா ளர்களை கவர்ந்தனர். முதல் சுற்று போட்டிகளிள் வெற்றி பெற்ற வீரர், வீராங்க னைகள் அடிப்படையில் அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல் வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.