districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பொய் வழக்கிலிருந்து விடுதலை

சேலம், ஏப்.10- கடந்த அதிமுக அரசில் பதியப்பட்ட பொய் வழக்கிலி ருந்து வாலிபர் சங்கத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட னர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜன.8 ஆம் தேதியன்று மோடி  அரசை கண்டித்து நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம்  மாநகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது வாலிபர் சங்கத்தினரை கைது செய்த  சேலம் மாநகர பள்ளப்பட்டி போலீசாரிடம் நியாயம் கேட்டதற் காக, அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடியை மனம்குளிர வைக்க காவல் அதிகாரியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த தாக வாலிபர் சங்க தலைவர்கள் சதீஷ்குமார், வெங்க டேஷ் ஆகிய இருவர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்தனர்.  இவ்வழக்கை சேலம் ஜேஎம்2 நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுக ளாக எதிர்கொண்டு அவர்கள் விடுதலை பெற்றனர். இவ்வ ழக்கை இலவசமாக வாதாடிய வழக்கறிஞர் வெற்றிவேல், சரஸ்வதி ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

வத்தல்மலை பகுதியில் குடிநீர் பஞ்சம்

வத்தல்மலை பகுதியில் குடிநீர் பஞ்சம் தருமபுரி, ஏப்.10- வத்தல்மலை கிராமங்களில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சத் தால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் பாலசிலம்பு, ஒன் றிக்காடு, பெரியூர் உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளன. குறிப் பாக அந்த மலை கிராமங்களில் உள்ள ஒன்றிக்காடு பகுதி யில் உள்ள பொது கிணற்றில் காலை நேரத்தில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாய் தண்ணீர் எடுக்கும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக இக்கிராம மக்கள் பல விவசாய  கிணறுகளுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்ற னர். குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அரசு அலு வலர்களிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என மலைக்கிராம மக்கள் கூறுகின்றனர். இதே நிலை  நீடித்தால் வத்தல்மலையில் இருந்து பொதுமக்கள் வெளியே றிவிடுவார்கள். வத்தல்மலை சுற்றுலாத்தலமாக மாற்றப்ப டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை கிரா மங்களில் பொதுமக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.  இம்மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம்: 5 ஆயிரம் பேர் தபால் வாக்கு

சேலம்: 5 ஆயிரம் பேர் தபால் வாக்கு சேலம், ஏப்.10- சேலம் மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற் பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம்  5 ஆயிரத்து 31 பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். சேலம் மக்களவை தொகுதியில் தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்கா ளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டிலி ருந்தே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. இதற்கென வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  நியமிக்கப்பட்டு, 12டி விண்ணப்ப படிவத்துடன் தொடர்பு டையவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப் பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 24 ஆம் தேதி வரை பெறப்பட்டது. அந்த  வகையில், சேலம் மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு  மேற்பட்ட 3,262 மூத்த வாக்காவர்களும், 1,918 மாற்றுத்தி றனாளி வாக்காளர்களும் என மொத்தம் 5,180 வாக்கா ளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மூத்த குடி மக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு கடந்த ஏப்.5, 6, 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில்  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறன் வாக்காளர்களின் வீடுக ளுக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் நேரில் சென்று தபால் வாக்குப்படிவத்தை அவர்களிடம் வழங்கினர். அதில்  அவர்களது வாக்கைப்பதிவு செய்து, சீலிட்டு உரிய பெட்டி யில் அவற்றை சேர்த்தனர். வாக்குப்பதிவு முதன்மை அலுவ லர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப் பணி நடைபெற்றது. தபால் வாக்குப் பதிவு முடிவடைந்ததை அடுத்து, சேலம்  மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் விவ ரம் சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓம லூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,  வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த குடி மக்கள் 3,152 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,879 பேரும் என  மொத்தம் 5,031 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். 110  மூத்த குடிமக்கள், 39 மாற்றுத்திறனாளிகள் என மொத் தம் 149 பேர் தபால் வாக்கை செலுத்தவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

குறைபாடுடைய ‘லிப்ட்’ வழங்கிய நிறுவனத்திற்கு அபராதம்

நாமக்கல், ஏப்.10- ஒப்பந்தப்படி குறித்த காலத்திற்குள் ‘லிப்ட்’ வழங்காமலும், மேலும் குறைபா டுடையதை வழங்கிய நிறுவனத்திற்கு அப ராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், காளப்பட்டியில் உள்ள எஸ்டேட்டில் வசித்து வருபவர் ஆர். செல்லப்பன் (70). இவர் கடந்த 2018 ஆம்  ஆண்டு வீட்டைக் கட்டி மாடியில் வசித்து  வந்துள்ளார். இவரது மனைவி உடல்நக் குறைவின் காரணமாக சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாட முடியும். இதனால் தமது  வீட்டிற்கு லிப்ட் ஒன்றை வாங்கி   பொருத்து வதற்காக சென்னையில் உள்ள ராமநாதன்  அண்ட் கோ என்ற தனியார் நிறுவனத்தி டம் லிப்ட் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார். ஒப்பந்தப்படி ரூ.19 லட் சத்தை செல்லப்பன் லிப்ட் வழங்குவதாக ஒப் புக்கொண்ட நிறுவனத்துக்கு கடந்த 2018  ஆம் ஆண்டு ஜூன் மாதம் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி இத்தாலியில் உள்ள நிறுவ னத்தில் உற்பத்தி செய்யப்படும் லிப்டை எலைட் எலிவேட்டர் என்ற நிறுவனம் மூல மாக இறக்குமதி செய்து பணத்தைப் பெற்ற நிறுவனம் செல்லப்பனுக்கு லிப்டை நான்கு மாத காலத்துக்குள் வழங்கி பொருத்தி தர வேண்டும். ஆனால், 8 மாதம் கழித்து லிப்ட்டை வீட்டில் பொருத்தப்பட்டுள்ளது. காலதாமதமாக பொருத்தப்பட்ட லிப்ட்டும் ஒருமுறை செல்லப்பனின் மனைவி சக்கர நாற்காலியில் லிப்டில் வரும்போது இடை யில் நின்று விட்டது. இதுகுறித்து பலமுறை லிப்டின் இறக்குமதியாளர் மற்றும் விற்பனை யாளர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தும்  சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை. இதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன் றத்தில் லிப்டின் இறக்குமதியாளர், விற்ப னையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது செல் லப்பன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த  வழக்கானது விரைவான விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் வழங் கிய தீர்ப்பில் குறைபாடுள்ள லிப்ட்டை  இறக்குமதியாளர் மற்றும் விற்பனையாளர் கள் விற்றதோடு சரியான சேவையையும் செய்து தரவில்லை என்று தெரிவித்துள்ள னர். ரூ.19 லட்சத்தை செலுத்தியவருக்கு ஒப் புக்கொண்ட நான்கு மாதத்தில் விற்பனை யாளர் லிப்டை வழங்கவில்லை. காலதாம தமாக வழங்கிய லிப்டிலும் பணம் செலுத்தி யவர் கேட்டுக் கொண்ட வகையில் அல்லாத கதவுடன் லிப்ட் வழங்கப்பட்டுள்ளது. வழங் கப்பட்ட லிப்டிலும் இயந்திர மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் குறைபாடுகள் இருந்துள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர் சாட்சி யம் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபித்துள் ளார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குறைபாடு உள்ள லிப்ட்டை வழங்கிய தால் அதனை நான்கு வாரத்துக்குள் எடுத்துக் கொண்டு, அதற்கு செலுத்தப்பட்ட ரூ.19 லட் சம் மற்றும் பணம் செலுத்தப்பட்ட நாளிலி ருந்து ஆண்டொன்று ஆண்டொன்றுக்கு 9  சதவிகிதம் வட்டி சேர்த்து வழக்கு தாக்கல்  செய்தவருக்கு லிப்ட் விற்பனையாளரும், இறக்குமதியாளரும் நான்கு வார காலத்திற் குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க  வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உற்பத்தி குறைபாடான பொருளை விற்றது மற்றும் சேவை குறைபாடு புரிந் தது ஆகியவற்றிற்காக வழக்கு தாக்கல்  செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற் றும் சிரமங்களுக்கு லிப்ட் விற்பனையா ளரும், இறக்குமதியாளரும் நான்கு வார காலத்திற்குள் ரூ.10 லட்சம் இழப்பீட்டை வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்றும், பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவிகிதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாவா குருவிகள் பறிமுதல்


உதகை, ஏப், 10- சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள ஜாவா குருவிகள்  பறிமுதல் செய்யப்பட்டன. ஜாவா குருவிகள் பொதுவாக பார்ப்பதற்கு காதல் பறவை கள் போன்ற அழகான பறவைகளாகும். இந்தப் பறவைக ளின் எண்ணெய்ப் பசை பொதுமக்களை வெகுவாகக் கவர் கிறது. இந்த ஜாவா ஹவாய், இலங்கை மற்றும் ஜமைக்கா போன்ற பல்வேறு நாடுகளின் தீவுப் பகுதிகளில் காணப் படுகின்றன. இப்பறவைகள் பொதுவாக குழுக்களாக வாழ் கின்றன. பெரும்பாலும் இப்பறவைகள் வயலில் பயிரி டப்பட்ட அரிசியை சாப்பிடுகின்றன, மேலும் அவை பெரிய  குழுக்களாக இருந்தால், அவை முழு நெல் வயலையும் அழிக்க முடியும்.  இவைகள் தற்போது ஜாவா தீவில் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. இதனால் அழிவின் விளிம்பில் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுக ளில் ஜாவா குருவிகள் செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், உதகை மார்க்கெட்டில் உள்ள ஒரு கடை யில் ஜாவா குருவிகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், நீலகிரி வனப் பிரிவு மற்றும் வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டுப் பணி  அதிகாரிகள், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் மார்க்கெட்டில் ஜாவா குரு விகள் விற்பனை செய்யப்பட்ட கடையில் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு முன்னர் உதகை பிங்கர்போஸ்ட் பகுதி யைச் சேர்ந்த ஒருவருக்கு குருவிகள் விற்பனை செய்யப்பட் டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் குரு விகளை வாங்கியவரிடமிருந்து மீட்டு தங்களது கட்டுப் பாட்டில் வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகை யில்,  ஜாவா குருவிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது கடை உரிமையாளருக்கு தெரியவில்லை. அத னால் இந்த குருவிகளை விற்பனை செய்துள்ளார். தற்போது  குருவிகளை பறிமுதல் செய்து விட்டோம். முதல் முறை  என்பதால் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கப்பட்டுள் ளது. உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் இந்த குரு விகள் வண்டலூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் இது போன்ற பறவைகள் விலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று கூறினார்.

தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஈரோடு,ஏப். 10- அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என மேட்டூர்  வலதுகரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையின் பாசன வாய்க்காலில் வறட்சி, குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கச் செயலாளர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவில், மேட்டூர் அணையின் வலது  மற்றும் இடது கரை வாய்க்கால் பகுதியில் நிலவும் வறட்சி யைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளின் கோரிக்கை களை ஏற்றும் குடிநீர்த் தேவைக்காகவும் அணையிலிருந்து இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மிகக் கடுமையான வெயில், வறட்சி நிலவும் இச்சூழலில் அணையிலிருந்து வாய்க்காலில் விநாடிக்கு 200 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. கூடுதலாக திறக்கப்பட்டால் மட்டுமே கடைமடைகளுக்கு வந்து சேரும். எனவே, மேலும் 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விவசாயிகளையும் கால்நடைகளையும் காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்தை எதிர்கொள்ள இயலாத பாஜக: கோவையில் விரட்டியடித்த மே 17 இயக்கத்தினர்

18ஆவது மக்களவை தேர் தலை ஒட்டி தமிழ்நாடு முழுவ தும் பிரச்சாரங்கள் சூடுபிடித் துள்ளன. ஒருபக்கம் பாஜக அரசை வீழ்த்தி நாட்டில் ஜனநா யகத்தை நிலை நிறுத்த வேண் டும் என, இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான கட்சி கள், ஒன்றிய மோடி அரசின் மக் கள் விரோத கருத்துகளை மக்க ளிடம் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். முறையாக  தேர்தல் நடத்தை விதிகளையும் பின்பற்றி, அதிமுகவின் தவறை யும், பாஜகவின் மக்கள் விரோத கொள்கையை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.  மறுபக்கம், எதற்கு தேர்த லில் நிற்கிறோம், யாரை எதிர்ப் பது, யாருக்கு ஆதரவு தருவது,  எதை சொல்லி வாக்கு சேகரிப்பது  என தெரியாமல், குட்டி போட்ட பூனை போல் அங்கேயும் இங்கே யும், சுற்றி தன்னை தானே ஏமாற்றி, மக்களையும் முட்டா ளாக்க நினைக்கிறது அதிமுக.   இன்னொரு பக்கம் பத்து வருடமாக ஊழல் செய்துவிட்டு, சம்பாதித்த பணம் பத்தாது என்று, மீண்டும் நாட்டை குட்டி சுவராக்க கங்கணம் கட்டி திரி கிறது பாஜக. தமிழ்நாடு முழுவ தும் வரட்டு கவுரவத்துடன் சுற்றும்  பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தான்  இல்லை. போகும் இடமெல்லாம்,  ’ஈ’ ஓட்டி வருகின்றனர். எப்படியா வது எங்களுக்கு கூட்டம் இருப் பதாக காட்டிக்கொள்ள, மோடியை ”ரோடு ஷோ” அழைத் தால், அவர் என்னவோ? ”பேஷன் ஷோவில் வருவது போல வித வித உடை அணிந்து  பம்மாத்து காட்டி வருகிறார்.  இந்த பருப்பு எல்லாம் இங்க  வேகாது என்கிற மாதிரி, மக்களும் புறந்தள்ளி வருகின்றனர். இப்படி தமிழ்நாட்டு மக் கள் புறக்கணிப்பதை பொறுக்க முடியாத பாஜக கட்சியினர், ஆங்காங்கே தங்களை எதிர்த்து  பேசும் மக்களையும், மக்கள் பிர திநிதிகளையும் வம்புக்கு இழுத்து, தகராறு செய்யும் வேலையை செய்து வருகின்ற னர்.  திருப்பூரில், மோடி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த நவீன மனிதர்கள் இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளை, மோடி  கும்பல் சட்டையை கிழித்து, பிரச் சார வாகனத்தை சேதப்படுத்தி னர். கோவை மக்களவைத் தொகு தியான பல்லடத்தில், ”பாஜக அரசால் தான் என்னுடைய விசைத் தறி தொழிலே வீழ்ந்தது” என  பேசிய தொழிலாளியை ஈவு இறக் கமில்லாமல் தாக்கினர். இப்படி  தமிழ்நாடு முழுவதும் அட்டூழியம்  செய்து இவர்கள், செவ்வாயன்று மே 17 இயக்கத்திம் ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி யிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ”வீழட்டும் பாஜக, வெல்லட் டும் தமிழ்நாடு” என்ற முழக்கத் தோடு மே 17 இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக முழுவதும் பார திய ஜனதா கட்சியை அதன்  கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப் பதற்கான பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகை யில், செவ்வாயன்று கோவை மக்களவைத் தொகுதியில், ஒண் டிப்புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய  அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சா ரம் மேற்கொண்டு வந்த நிலை யில், அந்த பகுதிக்கு வந்த  பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த னர். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் வந்த  கட்சியினர் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மே 17 இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்ட வும் செய்தனர். அதற்கு பதில டியாக திருமுருகன் காந்தி மற்றும்  அவருடனான தோழர்கள் பெருங்குரலெடுத்து பாஜக வினரை எதிர்த்து முன்னேறினர். இதனை கண்டு பஜகவினர் பம்மி பின்வாங்கினர்.  பின்னர் பாரத் மாதா கி ஜே என  பாஜகவினர் கத்த, ஜெய் பீம்,  பெரியார் வாழ்க, தமிழ்நாடு  தமிழருக்கு என்ற முழக்கங்களு டன் மே 17 இயக்கத்தினரும் முழக் கம் எழுப்பினர். மே 17 இயக்கத்தி னரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்த முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்  நிலவியது. மே 17 இயக்கத்தி னர் உரிய அனுமதி பெற்று பிரச்சா ரம் மேற்கொண்ட நிலையில், பாஜகவினர் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வித மாக நடந்து கொண்டது குறிப்பி டத்தக்கது. இதனிடையே காவல்துறையினர் மே 17 இயக் கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டு களை கழட்டுமாறு கூறவே போலீ சாருக்கும், மே 17 இயக்கத்தின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல், வஞ்ச கத்தை வெளிபடுத்தி வரும் இவர் களா? மக்களுக்காக சேவை செய்ய போகிறார்கள். இவர் களா? நம்முடன் தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள். மக்கள் பிரச்சனை பற்றி கேட்டால், ஜெய்  ஸ்ரீ ராம் என நழுவ மட்டுமே தெரி யும். தேர்தல் நடத்தை விதிக ளையே புரிந்து கொள்ளத் தெரி யாத பாஜகவினருக்கு, மக்களின்  மனநிலையை எப்படி புரிந்து கொள்ள முடியும். என்னதான் உருண்டாலும் ஒட்டுகிற மண்ணு தான் ஒட்டும் என அங்கிருந்த  பொதுமக்கள் முனுமுனுத்த படியே சென்றனர்.  -கோகுலகண்ணன்

அகழியில் விழுந்த யானை பலி

ஈரோடு, ஏப். 10- கடம்பூர் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் ஆசனூர், கடம்பூர், பர்கூர்  உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.  இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட  ஏராளமான வனவிலங்குகள் வசித்து வரு கின்றன. தற்சமயம் கடும் வறட்சி நிலவுவ தால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால்  சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வரு வதும், அங்கு வரும் வாகனங்களை தடுத்து  நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடு வதும் தொடர்கதையாகி வருகிறது. சில  யானைகள் அருகே இருக்கும் கிராமத்திற் குள் புகும் நிலை உள்ளது. இந்நிலையில் கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் ஞாயிறன்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை தேடி அங் கும் இங்கும் அலைந்தது. பின்பு தங்கவேலு  என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே வந்த அந்த யானை அப்பகுதியி லிருக்கும் ஒரு அகிழியில் எதிர்பாராத வித மாக தவறி விழுந்தது. உணவு, குடிநீரின்றி பலவீனமாக இருந்த அந்த பெண் யானை பள்ளத்தில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடி யது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் கடம் பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு சென்று உயிருக்கு போராடிய யானையை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். உடன டியாக அந்த பெண் யானைக்கு குளுக் கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக யானை சிக்கியிருந்த பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டது. தீவிர  முயற்சி மேற்கொண்ட நிலையிலும் சிகிச்சை  பலனின்றி அந்த பெண் யானை செவ்வா யன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தது.

சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க கோரிக்கை ஏற்பு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை

கோவை, ஏப். 10- நூறு சதவிகிதம் வாக்குப்பதிவை  உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக்  நிறுவனத்தில் பணியாற்றும் அனை வருக்கும் விடுமுறை அளிக்க வேண் டும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர்  சங்கம் கோரிக்கை விடுத்த நிலை யில், இதனை ஏற்று மூன்று நாட்கள்  தொடர் விடுமுறையை அளித்து டாஸ் மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட டாஸ் மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தலைமை தேர்தல் அலுவ லர் மற்றும் மத்திய தேர்தல் ஆணை யம், உள்துறைச் செயலாளர் மற்றும்  மதுவிலக்கு ஆணையாளர் உள்ளிட் டோருக்கு கோரிக்கை மனுவினை அனுப்பியிருந்தது. அதில், 18 ஆவது  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்க ளாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 19 ஆம்தேதி தமிழ கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்களிப்பது என்கிற இலக்கை அடைந்திட தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் தேர்தல் விடுமுறை தொடர்பாக, நாளிதழில் வரும் செய்திகள் நூறு  சதவிகிதம் வாக்களிப்பு என்ற நோக் கத்திற்கு உதவி செய்யாது. ஏனெ னில், பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்கள் டாஸ்மாக் நிறுவ னத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றிட சொந்த ஊருக்கு  குடும்பத்தோடு செல்ல வேண்டி யுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் நோக்கமான நூறு சதவிகிதம் வாக்க ளிப்பதற்கு ஏதுவாக தேர்தல் பரப் புரை முடிவுறும் நாளான ஏப்ரல் 17  ஆம்தேதி மற்றும் தேர்தல் நாளான  19 ஆம்தேதி முழு விடுமுறை அளித் திட வேண்டும் என கோரிக்கை மனுவினை அனுப்பியிருந்தனர்.  சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தற்போது டாஸ்மாக் நிறுவ னம் விடுமுறை தொடர்பான சுற்ற றிக்கை விட்டுள்ளது. இதில், நாடாளு மன்ற பொது தேர்தலை முன்னிட்டு  17,18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள்  விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட் டுள்ளது. எனவே, அன்றைய தினங்க ளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கும் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபான சில்லறை விற்பனை கடைக ளில் மொத்தமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும்,  மதுபான சில்லறை விற்பனை கடை கள், “அதனுடன் இணைந்த மதுக்கூ டங்கள் மற்றும் அருகில் உள்ள இடங்களில் மதுபானங்கள் கள்ளத்த னமாக விற்பனை செய்வது நடை பெற கூடாது. தவறும் பட்சத்தில் சம் மந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிஐடியு  டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறு கையில், பல தேர்தல்களில் டாஸ் மாக் ஊழியர்கள் முழுமையாக வாக் களிக்க முடியாத நிலை இருந்தது. காரணம் வாக்கு பதிவு முடிந்த மாலை 6 மணிக்கு கடையை திறக்க வேண்டும் என்பதால், வெளி யூர் சென்று வாக்களித்து விட்டு திரும்ப முடியாது என்பதால், வாக்க ளிப்பதற்கு செல்லாமல் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டே சிஐ டியு சார்பில் இந்த கோரிக்கை மனு வினை அளித்திருந்தோம். இதனை யேற்று தற்போது மூன்று நாட்கள் விடு முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறி வித்துள்ளது. இதற்கு எங்களின் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித் துக்கொள்கிறோம் என்றனர்.

பொள்ளாச்சியில் ரூ.90 கோடி பறிமுதல்

பொள்ளாச்சி, ஏப்.10-  பொள்ளாச்சி தனியார் கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாள் நடத்திய சோதனையில், தற்போது வரை நகை, பணம் என மொத்தம் ரூ.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில், வெங்கடேசா காலனியில், எம்பிஎஸ் என்ற தனியார் கோழிப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு, வருமான வரித்துறையினர் மூன்று நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புதனன்று உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி உட்பட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. அதில், தற்போது வரை 90 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோழிப்பண்ணை உரிமையாளர் அதிமுகவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

நமீதாவை அலைகழித்த போலீசார்: பாஜகவினர் செல்பி'

பிரதமர் பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த நடிகை  நமீதாவை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் செய்தார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டம் புதனன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு தினங் களாக கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நமீதா முகாமிட்டிருந்தார். இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த அவரை விவிஐபி கேட் வழியாக செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்த னர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் செல்லும் வழிக்கு நமீதா சென்றார். அங்கி ருந்த போலீசார் அவரை விவிஐபி கேட் வழி யாக செல்லுமாறு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நமீதா மீண்டும் விவிஐபி கேட் பகுதிக்கு வந்த போது, மீண்டும் காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர். அப்போது, அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்ட நமீதா, கட்சி நிர்வாகி கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டார். சீரியசாக சண்டை நடந்து  கொண்டிருந்த போதும், அதனை கொஞ்ச மும் சட்டை செய்யாத பாஜகவினர் நமீதாவு டன் செல்பி எடுப்பதிலேயே கவனம் செலுத் தியது நகைப்பை ஏற்படுத்தியது.

வேட்பாளர் பெயர் பொருத்தும் பணி துவக்கம்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி யில் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 296 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்ப டும் மின்னனு வாக்குபதிவு இயந்திரங் களில் வேட்பாளர் பெயர், சின்னம், பொருத்தும் பணி உதவி தேர்தல் நடத் தும் அலுவலர் கண்ணப்பன் முன்னிலை யில் தொடங்கியது.  முன்னதாக தேர்தல் பதிவு அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த வாக்குபதிவு இயந்திரங் களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னி லையில் திறக்கப்பட்டு மின்னனு வாக் குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் போன்ற  இயந்திரங்களை சோதனை செய்து வாக்குசாவடி மண்டல அலுவ லர்கள் வேட்பாளர்களின் பெயர், சின் னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

திமுக அலுவலகத்தில் பறக்கும்படை சோதனை

குன்னூர் திமுக அலுவலகத்தில் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகை யில் பறக்கும் படை, நிலையான கண்கா ணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு என 72 படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தேர்தலுக்கு ஒரு வாரமே இருப்ப தால் பறக்கும் படையினர் மாவட்டம் முழு வதும் தீவிர சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற் கொண்டு பணம், பரிசு பொருட்களை பறி முதல் செய்து வருகிறார்கள். இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங் களிலும், வேட்பாளர்களின் வாகனங்களி லும், பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 பேர் கொண்ட பறக் கும் படை அதிகாரிகள் குன்னூர் வண்டிப் பேட்டையில் திமுக நகர அலுவலகத்தில் செவ்வாயன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற் கொண்டனர்.  சோதனையில் அங்கு எது வும் கிடைக்கவில்லை. மேலும் சோத னையின் போது அங்கு முக்கிய பிரமுகர் கள் நிர்வாகிகள் யாரும் இல்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.