அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள்
கோவை, அக்.14- கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா நீட் பயிற்சி வகுப்பு துவங்கியது. கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து மாநக ராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டண மில்லா நீட் பயிற்சி வகுப்பு திங்களன்று துவங்கியது. இந்நிகழ் வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபா கரன், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நடைமுறை வகுப்புகள் பாதிக்காத வண்ணம் வாரம் இரு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின் றது. கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பயிலும் மாணவர்களை இப்பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்புகளை நடத்த உள்ளனர். அவர்களுக்கான போக்குவரத்து செலவு மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும், என்றார்.
தனியார் பள்ளியை விஞ்சிய அரசுப்பள்ளி மழைநீர் சேகரிப்பில் மாணவர்கள் அசத்தல்
கோவை, அக்.14- சூலூரில் முன்மாதிரி பசுமை அரசு பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்களன்று திறந்து வைத்தார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளை யம் பேரூராட்சி தனியார் அமைப்புடன் இணைந்து அரசு தொடக்கப் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்றி உள்ளது. பசுமை பள்ளியாக மாறிய இந்த பள்ளியில், பள்ளிக்கு கீழே நிலத்தடி நீரை சேமிக்கும் பொருட்டு தொட்டி கட்டப்பட் டுள்ளது. பள்ளியை சுற்றிலும் மகிழ மரங்கள் அமைத்து சுற்றுப் புற சூழலையும் பேணிக்காக்கும் வகையில் அரசு பள்ளி ஒன்று தனியார் பள்ளிக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது. ரூ.ஒன்றை கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்ட இந்த பள்ளி முழு வதும் ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இப்பள் ளியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, வகுப்பறைகளை ஆய்வு செய்த அமைச்சர் தனியார் பள்ளிக்கு சரி நிகராக இந்த பள்ளி வந்துள் ளதாக இதனை உருவாக்கிய பேரூராட்சிக்கு வாழ்த்து களை தெரிவித்தார். இவ்விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் அதிக நிதி ஒதுக் கீடு செய்யப்படும் கூடிய துறைகளில் முதன்மையாக இருப் பது பள்ளி கல்வித்துறை, வேளாண் பட்ஜெட்டை விட அதிக மாக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிகளை ஒதுக்கி வருகிறார். சிஎஸ்ஆர் பங்களிப்பில் பள்ளி கல்வித் துறையில் அதிக பள்ளிகளை கட்டுவதற்காக 5 லட்சம் ரூபாய் கொடுத்து முதலில் துவக்கி வைத்தவர் முதல்வர். தற்போது அது ஒரு கோடிக்கு மேலாக சென்று கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது. இது போன்ற பள்ளிகள் உருவாக்க அது உதவியாக இருக்கும், என்றார்.
மின் தடை
நாமக்கல், அக்.14- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், கபி லர்மலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாயன்று (அக். 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறி யாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கபிலர்மலை, சிறுகிணத்துப் பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங் கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ் சப்பாளையம், சேளூர் செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளி பாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்ப்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர் பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலை., நிர்வாகத்திற்கு கண்டனம்
சேலம், அக்.14- பட்டமளிப்பு விழா அணிவகுப்பில் பதவிக் காலம் முடிந்த ஆட்சிமன்றகுழு உறுப்பி னர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்த பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள் ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் 4 ஆட்சிமன்ற உறுப்பினர் பதவி கள் கடந்த அக்.9 ஆம் முதல் காலியாக உள் ளன. இந்நிலையில், அக்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டம ளிப்பு விழா அணிவகுப்பில், பதவிக்காலம் முடிந்த ஆட்சிக்குழு உறுப்பினர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய உள்ள தாக தகவல்கள் வந்துள்ளது. இதுதொடர் பாக துணைவேந்தரிடம் தெரிவித்தும், உரிய மதிப்பளிக்காததை சேலம் பெரியார் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அச்சங்கத்தின் நிர்வாகி தாமோதரன் வலியு றுத்தியுள்ளார்.
சாயப்பட்டறைகளில் நிலக்கரி எரிப்பு
ஈரோடு, அக்.14- பவானி அருகே சாயப்பட்டறைகளில் நிலக்கரி எரிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி அருகே காடையாம்பட்டி, சேர் வாம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் பல சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றது. இவற்றிலி ருந்து இரவு நேரங்களில் வேதிப் பொருள்கள் கலந்த சாயக் கழிவு நீர் நேரடியாக பவானி ஆற்றிலும் கலக்கிறது. குறிப் பாக விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்ற பவானி ஆற்று நீரை கவிதா டையிங் என்ற பெயரில் இயக்கப்ப டும் சாயப்பட்டறை உரிமையாளர் தன்னுடைய சாயப்பட்ட றைக்கும், சுற்றியுள்ள சாயப்பட்டறைகளுக்கும் விற்பனை செய்கிறார். சீதபாளையம், திப்பிசெட்டிபாளையம், காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் போன்ற ஊர்க ளில் பவானி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுக்கிறார். இதனைப் பயன்படுத்தி விட்டு பைப்லைன் மூலம் இரவு நேரங்களில் கழிவு நீரை நேரடியாக பவானி ஆற்றில் கலந்து விடுகிறார். மேலும் சாயப்பட்டறைகளில் விறகுக்குப் பதில் நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் புற்று நோய் உள்ளிட்ட கடுமையான நோய்கள் பரவுகின்றன. விவசா யம் சீர்கெட்டு வருகிறது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
அத்துமீறும் நுண்நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர், அக்.14 - தாராபுரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் கடன் வசூலிப் பதற்காக பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் நுண் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா மாநாடு வலியுறுத்தி உள்ளது. தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் திங்கட்கிழமை தாராபுரம் தாலுகா 17 ஆவது மாநாடு நடைபெற்றது. கே.முத்துச்சாமி கொடியேற்றினார். இடைக்குழு உறுப்பினர் எஸ் சத்தீஸ்வரன் அஞ்சலி தீர்மானம் முன்மொழிய, இடைக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் மாநாட்டை தொடக்கி வைத்தார். தாராபுரம் தாலுகா செயலாளர் என். கன கராஜ் மாநாட்டு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் என். சுப்பிரமணியன் வாழ்த்திப்பேசி னார். இம்மநாட்டில், தாராபுரம் தாலுகாவில் நுண் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதை தடுக்க வேண்டும், தாராபு ரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தை அலங்கியம் சாலை வரை நீட்டிக்க வேண்டும், நகராட்சி நிர்வாகம் தெரு விளக்கு, குப்பை அள்ளுவது உள்ளிட்ட அடிப்படை பணி களை மேற்கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளில் பொருட் கள் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் 11 பேர் கொண்ட தாரா புரம் தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி நிறைவுறையாற்றினார். இடைக்குழு உறுப்பினர் ஆர்.ராஜா நன்றி கூறினார்.
அங்கன்வாடி ஊழியர்கள் பணி மாறுதல் ஆணையை மீண்டும் வழங்க வலியுறுத்தல்
திருப்பூர், அக்.14- அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட பணி மாறுதல் ஆணையை ரத்து செய் துள்ளதற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும் அந்த ஆணையை ரத்து செய்து, உடனடியாக மீண்டும் பணி மாறுதல் வழங்க வேண்டும் எனக் கோரி இயக்குநர் அலுவலகத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் அக்.15ஆம் தேதி கடிதம் அனுப்பு வது என்றும், அக்.16ஆம் தேதி அங்கன்வாடி மைய சாவியை ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் டி.சித்ரா மற்றும் மாவட் டச் செயலாளர் கே.சித்ரா திங்களன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: காலியாக உள்ள அங்கன்வாடி மையங் களில் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பணி யிட மாறுதல் வழங்கிய பின்னரே காலிப் பணியிடங்களுக்கு பணி நியமன நடவடிக்கை கள் தொடர வேண்டும் என அரசு வழிகாட்டி கடிதம் உள்ளது. அதன்படி முதன்மை அங் கன்வாடி பணியாளர்களுக்கு கட்ந்த அக்.1 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரால் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பணியிட மாறுதல் பெற்ற வர்கள் சம்பந்தப்பட்ட மையங்களில் அன்று முதல் பணி புரிந்து வருகின்றனர். மேலும், 5 வருடம் பணி முடிந்து காத்திருக்கும் பட்டிய லில் உள்ள குறு அங்கன்வாடி பணியாளர்க ளுக்கு முதன்மை அங்கன்வாடி பணியாளர்க ளாக பதவி உயர்வு வழங்க கோரி அக்.3ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த அக்.8ஆம் தேதி முதல் பணியிட மாறு தல் வழங்கப்பட்ட ஆணையை இயக்குநர் அலுவலகம் ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து திங்களன்று நடை பெற்ற அங்கன்வாடி சங்க மாவட்ட செயற்கு ழுக் கூட்டத்தில், பணி மாறுதல் வழங்கப் பட்ட ஆணையை மீண்டும் பெற அக்.15ஆம் தேதி இயக்குநர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவது, அக்.16ஆம் தேதி கூடுதல் பொறுப்பு மைய சாவி மற்றும் கைப்பேசியை அலுவலகத்தில் ஒப்படைப்பது என முடி வெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள னர்.
சமூக வலைதளத்தில் பெற்றோர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை
திருப்பூர், அக்.14- மழைக்கால விபத்துகள் குறித்து குழந்தைகளுக்கு அறிவு றுத்த வேண்டும் என பெற்றோருக்கு சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதளம் மூலமாக பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையிலான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், இது மழைக் காலம் என்பதால் கீழே அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடவோ அருகில் செல்லவோ கூடாது என வீட்டில் உள்ள குழந்தைகளிடம் பெற்றோர் அறிவுறுத்தி கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கார்ட்டூன் படத்துடன் பதிவு வெளியிட் டுள்ளனர். மாவட்ட காவல்துறையினரின் இந்த விழிப்பு ணர்வு பதிவு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த பதிவை ஏராளமானோர் பகிர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
1 கிலோ பீன்ஸ் ரூ.160க்கு விற்பனை
திருப்பூர், அக்.14- வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40 உயர்ந்து இந்த வாரம் 160க்கு விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். உள்ளூர் விவசா யிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையான பீன்ஸ், இந்த வாரம் ரூ.40 விலை உயர்ந்து ரூ.160 க்கு விற்பனையா னது. தற்போது பெய்து வரும் மழையால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். காய்கறிகளின் விலை நிலவரம்: கேரட் ரூ.60, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பீட்ரூட், வெண்டைக்காய், பாகற்காய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.45, புடலங்காய், பச்சை மிளகாய் ரூ.40, கத்தரிக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ் - ரூ.30, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.360 விற்பனை யானது. கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.10, மல்லித்தழை கட்டு ரூ.40, புதினா கட்டு ரூ.10, வாழைத்தண்டு ஒன்று ரூ.20, வாழைப்பூ ஒன்று ரூ.30, காலிஃபிளவா் ஒன்று ரூ.60, சுரைக்காய் ஒன்று ரூ.10 க்கு விற்பனையானது.
போனஸ் கோரி ஏஐடியூசி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், அக்.14 - அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் தற்போது உயர்ந்துள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்கக் கோரி ஏஐடியுசி ஆர்ப் பாட்டம் நடத்தியது. ஏஐடியுசி பாத்திரத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ். செல்வராஜ் தலைமை யேற்றார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர். நடராஜன், பனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.சேகர், ஜெனரல் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஜீ.ரவி, ஏஐடியுசி மோட்டார் சங்க மாவட்ட பொதுச் செயலா ளர் கே.சுரேஷ் ஆகியோர் உள்பட திரளானோர் பங்கேற்ற னர்.