districts

img

சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் வன அலுவலர்கள்

நாமக்கல், பிப்.10- இருக்கூர் பகுதியில் கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் 42 வன அலுவலர்கள் ஈடுபட்டு வருவ தாக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந் தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலு வலகத்தில், இருக்கூர் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத் துறையின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவ டிக்கைகள் தொடர்பாக வனத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் தலைமையில் வெள்ளி யன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ச.சேகர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதன்பின் அமைச்சர் மதிவேந்தன் செய் தியாளர்களிடம் கூறுகையில், வனத்துறை சார்பில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சிறுத்தை புலியை பிடிப்பதற்கு இரண்டு  கூண்டுகள் மற்றும் 4 விலங்குகள் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் டிரோன் கேமரா மூல மாக சிறுத்தை புலி நடமாடும் இடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச் சிறுத்தை புலியை தேடும் பணியில் 42 வனத் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். தொடர்ந்து சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் நுட்பம் தெரிந்த விலங்குகளை கண்காணிக்கும் 3 மலைவாழ் கண்காணிப்பா ளர்கள் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வர  உள்ளனர். இது மட்டுமின்றி வன உயரடுக்கு படை யைச் சேர்ந்த 4 நபர்கள் கோவை மற்றும் வைகை அணை பகுதியிலிருந்து சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நவீன தொழில் நுட்ப கருவிகளுடன் வந்துள்ளனர். இரண்டு வனத் துறை கால்நடை மருத்துவர்களும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு பல்வேறு ஆலோச னைகள் வழங்கி வருகின்றனர். சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறை சார்பில் அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டு வரு கிறது. மேலும் கண்காணிப்பு கேமராவில் 5 கி.மீ முதல் 8 கிலோமீட்டர் தொலைவிற்குள் சிறுத்தை புலி நடமாடும் இடம் பதிவாகி உள்ளது. புலியின் பாதச்சுவடு மூலம் சிறுத்தை புலியின் நடமாட்டம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதன்படி சிறுத்தை புலியானது எந்த இடத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்று அறிந்து அந்தந்த இடங்களில் கூடுத லாக கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற் கும், கூண்டுகளை அதிகப்படுத்துவதற்கும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு தொடர்ந்து சிறுத்தை புலி நடமாடும் இடங்களில் எவ்வாறு பாது காப்பாக இருப்பது என்பது குறித்த வழிமுறை கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மக்க ளுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. மக்களி டம் அவர்களின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் ஆகியவை எந்தெந்த நேரங்களில் வெளியில் கட்டி வைக்க வேண்டும் என்ற அறி வுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் வனத் துறை ஈடுபட்டிருக்கும் இந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான  தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் மீது  கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார். முன்னதாக, இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை வனப்பாதுகாப்பு அலுவலர் (திருச்சி மண்டலம்) சதீஸ், சேலம் மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன‌ அலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த், வனத்துறை கால்நடை மருத்து வர்கள் (ஓய்வு) மனோகரன், பிரகாஷ் உள் ளிட்ட வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.