districts

img

உறைபனியால் உதகை வனப்பகுதியில் தீ

உதகை, பிப்.6- உதகையில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, பிங்கர்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பனியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக் கம் குறைந்து கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உறை பணியின் தாக்கம் தீவிர மடைந்துள்ளது. அதேபோல் பகல் நேரங்க ளில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து உள் ளது. இதனால் உதகை வனப்பகுதியில் ஏற்பட்டு வரும் வறட்சி காரணமாக செடி கொடிகள் காய்ந்தும் கருகத் துவங்கியுள் ளன. இந்நிலையில், பகல் நேரங்களில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வியாழ னன்று பிங்கர்போஸ்ட் அருகே தனியாருக்கு சொந்தமான புல்வெளி மைதானம் அருகே உள்ள வனப்பகுதியில் தீ பிடித்தது. இது தொடர்பாக பொதுமக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தக வல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்பு துறையி னர் உதவியுடன் காட்டுத் தீயை கட்டுப்படுத் தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.